பணத்தின் பக்கதில் இந்த பொருளை மட்டும் வைக்காதீர்! பணம் நிலையாக கையில் தங்காது!

- Advertisement -

இந்த உலகத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஒரு மனிதன் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டே இருப்பது பணம் மட்டும் தான். அதுவும் அவன் ஆசைக்காக பணத்தின் மீது ஆசை கொண்டுள்ளானா என்று கேட்டால் அதுவும் கிடையாது ஏனென்றால் இந்த உலகில் அவன் குடும்பம் வாழ்வதற்கு அந்த பணம் ஒரு முக்கியமான ஒன்றாக உள்ளது. இப்படி நம் வாழ்வில் எதற்காக மிகவும் ஆசைப்பட்டு ஏங்கி ஓடுகிறோமோ அது மட்டும் நம் கையில் இருக்கவே இருக்காது அப்படி அப்படி இந்த உலகில் ஓடும் பெரும்பாலானவர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டது என்று ஒடுகிறார்கள் ஆனால் அந்த பணம் அவர்கள் கையில் நிலைப்பேதே இல்லை.

-விளம்பரம்-

நாம் செய்யும் தவறுகள்

இப்படி நாம் பணத்தை சம்பாதிக்கும் முயற்சியில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் கூட நாம் பணம் நாம் கையை தங்காமல் போய்விடும் அதற்காக சில சாஸ்திர முறைகளை நாம் கடைபிடித்து வரும் போது அந்த பணத்திற்கு நம் மீது ஆசை வந்து நம்மிடம் நிலையாக இருக்க தொடங்கும். இப்படி நம் கையிலே ஒருபோதும் தாங்காத பணத்தை நாம் கையில் நிரந்தரமாக இருப்பதற்காக நாம் செய்யும் என்னென்ன சிறு தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணப் போகிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

கை கடிகாரம்

பொதுவாக பலரும் தங்கள் வீட்டு பீரோவில் பணம் வைத்து இருக்கும் இடத்தில் கைக்கடிகாரத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். முதலில் நாம் பணம் வைத்திருக்கும் இடத்தில் கடிகாரம் இருக்கவே கூடாது அந்த கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் பணமும் அந்த இடத்தில் நிற்காத ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் அப்படி வைத்திருக்கும் கடிகாரம் தங்க கடிகாரம் என் வைரத்தால் செய்யப்பட்ட கடிகாரமாக கூட இருக்கலாம் பணம் இருக்கும் இடத்தில் அருகில் கடிகாரம் வைக்க கூடாது. ஏன் நீங்கள் பணம் வைத்து இருக்கும் பீரோ, பெட்டிகள், மேஜை போன்ற பொருட்கள் வைத்திருக்கும் இடத்தின் மேலே மேஜை கடிகாரங்கள் வைப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

சீனர்கள்

இப்படி நாம் பணம் புழங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கடிகாரங்களை பக்கத்தில் வைக்காமல் சற்று தூரமாக வைத்து வர வேண்டும். ஏனென்றால் கரிகாரம் 24 மணி நேரம் ஓடிக்கொண்டே இருப்பது போன்று நாம் வைக்கும் இடத்தில் இருக்கும் பணமும் நம் கைகளில் தாங்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். இதைப் பற்றி இன்னொரு விஷயம் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்றால் சைனா போன்ற நாடுகளில் பணம் வைக்கும் இடங்களில் கடிகாரம் வைக்கக் கூடாது என்ற சாஸ்திரத்தை கால காலமாக அவர்கள் பின்பற்றி வருகின்றனராம்.

தீப வழிபாடு

உங்கள் வீட்டில் பணம் நிலையாக தங்குவதற்கு தீப வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் வீட்டில் என்னதான் விலை உயர்ந்த மின்சார விளக்குகள் பொருத்தி வைத்து இருந்தாலும் காலை மாலை பூஜை செய்து வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது போன்று வரவே வராது அதனால் வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் இரண்டு வேளையும் தீபம் ஏற்றி இறைவழிபாடு என்பது தவறாமல் செய்து வரும் பட்சத்தில் வீட்டில் அது ஒரு சுபிட்ஷசத்தை தந்து லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். இதனால் நம் வீட்டிற்கு வரும் பணம் நம்மிடமே தங்கிக் கொள்ளும்.

-விளம்பரம்-

நேர்மறை ஆற்றல்

நீங்கள் ஒரு மின்சார விளக்கு ஏற்றுவதற்கும் வீட்டில் ஒரு அகல் விளக்கு ஏற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒரு அகல் விளக்கு ஏற்றும் போது அதிலிருந்து உண்டாகும் ஒரு வெளிச்சத்தின் மூலமாக நமக்கு ஒரு நேர்மறை ஆற்றல் உண்டாகும். இப்படி நீங்கள் விளக்கு ஏற்றும்போது வீட்டில் உள் பெண்கள் அவர்களுடைய வாயால் ஸ்வாதகம் என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரித்து விட்டு தீபம் ஏற்றும்போது உங்கள் வீட்டில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்வார்கள். அஷ்டலட்சுமியும் ஒரு வீட்டில் குடியிருக்கும் போது அந்த வீட்டில் செல்வத்துக்கு தட்டுப்பட இருக்கும் பணம், பொன், பொருள் என அனைத்து செல்வமும் நிறைந்து காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here