2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. வேத சாஸ்திரங்களின் படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு மாற்றுவதன் மூலம் 12 ராசியினருக்கும் சுப, அசுப பலன்கள் உருவாகும். அந்த வகையில் ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். தொடர்ந்து மே மாதம் மிதுன ராசிக்கும் இடம்பெயர்கிறார். இதனால் மே மாதம் குரு பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. மே 14, 2025 அன்று, ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழையும் குரு பகவான், பிறகு அக்டோபர் 18ஆம் தேதி வக்ர நிலையை அடைவார். பின்னர், டிசம்பர் 3 ஆம் தேதி, வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது, புத்தாண்டில் குரு பகவான் மூன்று முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். 2025 ஆம் ஆண்டு பெயர்ச்சியாகும் குருவால் பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரிஷபம்

குரு பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வேகம் கூடும். பணியிடத்தில் புதிய பதவி கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குருவின் கருணையால், நீங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும்.
மிதுனம்

குரு பெயர்ச்சியினால், மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். திடீரென்று பண வரவு அதிகமாகும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலத்தில் முழுமையடையாத பணிகள் முடிக்கப்படும். எந்தவித இடையூறும் இன்றி பணிகள் நிறைவடையும்.
சிம்மம்

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறலாம். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கார் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அதிர்ஷ்டவசமாக நினைத்ததை விட வேகமாக சில வேலைகள் முடியும். இந்த காலகட்டத்தில் சொத்துக்களில் முதலீடு செய்வது மிகவும் சாதகமானது.
இதனையும் படியுங்கள் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அபூர்வ நிகழ்வால் உச்சத்தை தொட போகும் மூன்று ராசிகள்!



