நீங்கள் வாங்கும் சம்பள பணம் மற்றும் தங்கம் பல மடங்காக பெருக இந்த ஒரு மண் சட்டி இருந்தால் போதும்!

- Advertisement -

என்னதான் இன்றைய நாட்களில் நாம் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் வாங்கிய சம்பளப் பணத்தில் செய்யும் செலவுகளும் அதிகமாகவே உள்ளது இது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் செலவு செய்யும் பொருள்களின் விலையும் அதற்கேற்றார் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை விட இன்னொரு கொடுமை என்பது நமக்கு தெரியாமலே நாம் சம்பாதிக்கும் பணம் வீண் செலவாகிக் கொண்டே இருப்பது தான். இதனால் துளியளவும் கூட நமது வீட்டில் சேமிப்பு இல்லாமல் போகிறது. அதனால் நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிது அளவு பணத்தை சேர்த்து வைத்தாலும் அந்த பணம் பல மடங்காக பெருகி வர இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

பரிகாரம் செய்ய தேவையாவை

இப்படி நாம் சிறு சேமிப்பாக இருந்தாலும் நம் வீட்டில் புழங்கி கொண்டிருக்கும் பணம் பல மடங்காக பெருகுவதற்கு இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவைப்படுவது மண்ணால் செய்யப்பட்ட சிறிய மண் சட்டி போதும் இதற்கு உங்கள் வீட்டில் வைத்திருக்கும் பழைய மண் சட்டியை பயன்படுத்தக் கூடாது. இதற்காக புதியதாக ஒரு மண்சட்டி வாங்கி தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்பு இதனுடன் வைப்பதற்காக நமக்கு மல்லிகை பூ தாமரை பூ தேவைப்படும் இந்த இரண்டு பூவும் நம் வீட்டிற்கு பணம் மட்டும் தங்கத்தை வீட்டிற்கு ஈர்த்து கொடுக்கும் சக்தி கொண்டவை. இந்த மூன்று பொருட்களும் நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கிய பொருட்கள்.

- Advertisement -

பூக்களை நிரப்ப வேண்டும்

நம் வீட்டின் தங்கம் மற்றும் பணம் வரவை அதிகரித்து நம் வீட்டின் பணம் பழக்கம் பல மடங்காக அதிகரிக்க செய்யும் இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் மண் சட்டியை சுத்தமாக கழுவி எடுத்துவிட்டு அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மண் சட்டியில் நாம் வைத்திருக்கும் மல்லிகை பூவை நிரப்பி அதன் மேல் ஒரு தாமரை பூர வைத்துக் கொள்ளுங்கள் நாம் வைக்கும் தாமரை பூ எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை வைக்கலாம்.

பரிகாரம்

அதன் பிறகு இந்த பரிகாரத்தை எளிமையாக செய்துவிடலாம் நீங்கள் இப்படி தயார் செய்த மண் சட்டியை பூஜை அறையில் வைத்து விட்டு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த மண் சட்டியில் ஒரு ஒரு மணி நேரம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த மண்சட்டிக்கு கற்பூர, தீபாராதனை காட்டி உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வம் அல்லது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து இந்த பணம் பல மடங்காக பெருக வேண்டும். எக்காரணம் கொண்டு வீண் செலவாக கூடாது என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த பணத்தை வைக்காதீர்

இப்படி இந்த சக்தி வாய்ந்த பரிகாரம் செய்யும் போது நீங்கள் உங்கள் சம்பளப் பணத்திலிருந்து எடுத்த ஒரு தொகையை மட்டுமே இதில் வைத்து பூஜை செய்ய வேண்டும் தவிர நீங்கள் கடனாக வாங்கிய பணத்தையோ அல்லது மற்றவர் உங்களிடம் கொடுத்து வைக்கும் பணத்தையும் இதில் வைத்து பரிகாரத்தை செய்யக் கூடாது. நீங்களும் உங்கள் சம்பள பணத்தை மட்டும் தொடர்ந்து இதில் வைத்து இந்த பரிகாரத்தை செய்து வரும் போது பணமானது உங்களிடமே தங்கி பல மடங்காக பெருகிக்கொண்டே இருக்குமே தவிர வீண்விரயம் செலவுகள் ஆவது தவிர்க்க படும்.

-விளம்பரம்-

தங்கம் கூட போடலாம்

அதாவது நாம் பரிகாரத்திற்கு வைத்திருக்கும் இந்த மண்சட்டி ஒரு அட்சய பாத்திரம் போல் வேலை செய்யும். ஏன் உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டும் என விருப்பப்படுவார்கள் ஒரு குண்டுமணி அளவிலான தங்கத்தையும் இதில் போட்டு வைக்கலாம் அதாவது கம்மல் திருகாணி இது போன்ற ஏதாவது ஒரு பொருளை இதில் போட்டு வைத்தால் கூட உங்கள் வீட்டில் தங்கும் பல மடங்காக பெருகும். நீங்கள் இந்த பரிகாரம் செய்யும் மண் சட்டியில் வைத்திருக்கும் பூக்கள் வாடாமல் பார்த்து கொள்ள வேண்டும் பூக்கள் வாடிவிட்டால் உடனடியாக மாற்றி வேறு பூக்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here