சம்பள பணம் வங்கியதும் இந்த பெட்டியில் வைத்து எடுங்கள் போதும்! பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

இன்றைய நாட்களில் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் பணமே சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களால் பணத்தை சேமிக்க முடியாமலே போகிறது அதையும் மீறி அவர்கள் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வைத்தாலும். அந்த பணத்தை முடித்து கட்டுவதற்கு என்று ஏதாவது மிகப்பெரிய செலவு ஒன்று வந்து விடுகிறது. இப்படி ஒரு பக்கம் இருந்தால் இன்னொரு பக்கம் சிலருக்கு அவர்களின் வருமானத்தை விட அவர்கள் செலவு செய்யும் தொகை அதிகமாக உள்ளது. ஆனால் பணம் உங்கள் கையில் சேருவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கஷ்டத்தோடு கஷ்டமாக

நீங்கள் பல வருடங்களாக சம்பாதித்த பணத்தை மருத்துவமனைக்கும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் மட்டும் கொடுத்துக் கொண்டே வருகிறீர்கள் சேமிப்பு என்று எதுவும் இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறீர்களா. அப்போ செலவுடன் செலவாக எப்படியாவது கஷ்டப்பட்டு நான் சொல்லும் இந்த பொருளை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை அந்த பொருளுக்குள் வைத்து எடுத்து நீங்கள் உபயோகப்படுத்தி பாருங்கள் நீங்கள் சம்பாதிக்க பணம் கட்டாயமாக வீண் செலவாகாது மாறாக உங்கள் கையில் நிலையாக தங்கும் சேமித்து கொள்ளலாம்.

- Advertisement -

பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்காக ஒரு கண்ணுடைய தேங்காய், சிறிய இளநீர், சிறிய கருங்கல்: சந்தனக்கட்டை, துளசி குச்சி, மூங்கில் குச்சி போன்ற பொருள்கள் எல்லாம் தேவைப்படும். இவை எல்லாம் உங்கள் வீட்டில் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து எளிதாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி நாம் எடுத்துக் கொண்ட இந்த பொருட்களை எல்லாம் ஒரு மரப்பெட்டியில் வைத்து கொள்ளுங்கள் பின்பு உங்கள் கைகளுக்கு வரும் எந்ந பணத்தையும் இந்த மரப்பெட்டியில் வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

பணம் சேரும்

இப்படி நாம் சம் தயார் செய்த இந்த பெட்டிக்குள் நீங்கள் சம்பாதித்த பணம் இல்லை உங்கள் கைக்கு வரும் எந்த பணமாக இருந்தாலும் இந்த பெட்டியில் வைத்து எடுக்கும் போது உங்களிடம் இருந்து பணம் வீண் செலவுகளுக்காக விரையமாகது இருக்கும். நீங்கள் பணம் செலவு செய்யும் காரியங்கள் எல்லாம் சுப காரியங்களாகவே இருக்கும் மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொள்ளும் போது அவள் அந்தப் பெட்டியில் வாசம் செய்வாள். மகாலட்சுமி இருக்கும் இடம் எப்போதும் லட்சுமி கடாட்சமாக தான் இருக்கும் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் உங்கள் பணம் உங்கள் கையில் நிரந்தரமாக தங்கும், உங்கள் வீட்டின் பண வரவும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here