இந்த 5 பொருள் வீட்டில் இருந்தால் மட்டும் போதும் வீட்டிற்கு பணம் தேடி வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும்!

- Advertisement -

நம் வீட்டில் குடும்பத்துடன், சந்தோஷமாகவும், அன்பு, அரவணைப்புடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு செல்வங்கள் தேவைப்படும். ஆகையால் நாம் வீடு கட்டும் பொழுதும் சரி, நாம் வீட்டில் உள்ள பொருட்களையும் வாஸ்து சாஸ்திர விதிகளை கடைபிடிப்பதன் மூலம் நாம் குடும்பத்துடன் செல்வ செழிப்புடன் வசதியாக வாழலாம். ஆனால் அதையும் தாண்டி நம் வீட்டில் செல்வம் பொங்கி வழிவதற்கும் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க. நம் வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய நம் வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த ஆன்மீகம குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

சங்கு

மகாலட்சுமி தாயார் தன் கையில் சங்கு வைத்திருப்பது போன்ற திருவுருவப் படங்களையோ அல்லது வீட்டின் பூஜை அறையில் சங்கு வைத்திருப்பது மிகவும் நல்லது. இது நம் வீட்டிற்கு சுபிக்சத்தை தரக்கூடியது ஒன்று.

- Advertisement -

புல்லாங்குழல்

விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணர் பயன்படுத்தும் புல்லாங்குழல் இசைக்கருவியை நாம் வீட்டில் வைப்பதன் மூலமாக மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் வாசம் செய்யவாள். அதனுடன் இந்த புல்லாங்குழல் நம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் தேடி தரும் நம் வீட்டில் உள்ள வாஸ்து சாஸ்திர பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சக்தி கொண்டது.

குபேரர் சிலை

நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே அல்லது சுய தொழில் நடத்தும் இடத்திலேயோ அல்லது உங்கள் வீட்டிலேயோ எங்கு வேண்டுமானாலும். குபேரரின் சிலையை வாங்கி வடக்கு திசை பார்த்தவாறு வைத்தால் அது தொழில் நடத்துபவர்களுக்கு லாபத்தை ஈட்டி தரும் வேலை பார்ப்பவர்களுக்கு பணவரவை அதிகரிக்கும்.

தேங்காய்

முன்பெல்லாம் நமது வீட்டில் வெளியே மஞ்சள் துணியில் தேங்காய் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். ஆகையால் அதிலும் ஒற்றை கண்ணுடைய தேங்காயை மஞ்சள் துணியில் கட்டி தொங்க விட்டால் அது நம் வீட்டிற்குள் வரும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை வரச் செய்யும் வீடும் லட்சுமி கடாட்சமாக இருக்கும்.

-விளம்பரம்-

விநாயகர் சிலை

பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வர கஷ்டத்தோடு கஷ்டமாக செலவு செய்து விநாயகர் நாட்டியம் ஆடுவது போல் இருக்கும் உருவச் சிலையை வாங்கி வீட்டில் வைத்தால் அது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும். உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டமும் தீர்ந்துவிடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here