கனவில் கூட சொந்த வீடு வாங்க முடியாதவர்கள் ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொன்னால் போதும்! வீடு வாங்க பணம் சேர்க்கலாம்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் ஒருவரிடம் உங்களது லட்சியமாக எதை வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் நான் கேட்கும் நூறு பேரில் 90 பேர் செல்லும் பதில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதாக தான் இருக்கும். அந்த 90 பேரில் 50 பேருக்கு சொந்தமாக வீடு கட்டி அங்கு வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியமாகவே இருக்கும். இப்படி நாம் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற கனவுடன் மட்டும் இருந்துவிட்டால் போதாது அதற்கு தேவையான பணத்தையும் நாம் சம்பாதிக்க வேண்டும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் செலவாகி கொண்டே இருக்கிறது என்று கவலைப்படாதீர்கள். இன்று நான் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு தேவையான அளவு பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும் அதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

மந்திர வார்த்தை

முதலில் நாம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய அந்த வார்த்தையை பற்றி பார்த்து விடுவோம் அது “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமி தாயாருக்கு சொந்தமான பீஜ மந்திரம். இது இதோடு நாம் 528 என்ற இந்த நம்பரையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எப்படி இந்த இரண்டு வார்த்தைகளால் பணவரவை அதிகரிக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா ?

- Advertisement -

நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஓரை இருக்கும் நேரத்தில் தாயாருக்கு சொந்தமான ஸ்ரீம் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் வீட்டில் பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதேபோல் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு அதில் ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதி விட்டு அதனுடன் 528 என்ற நம்பரையும் எழுதி கொள்ளுங்கள் இதை இத்தனை தடவை தான் எழுத வேண்டும் என்று வரைமுறை எல்லாம் கிடையாது எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.

528 ல் என்ன சிறப்பு

இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்து உங்களின் கனவை நிறைவேற்றுவதற்கு தேவையான அளவு பணத்தை சேமிக்கவும் முடியும். எதற்காக இந்த 528 என்ற நம்பரை பிரத்யோகமாக சொல்கிறோம் என்று தெரியுமா இந்த 528 ல் இருக்கும் மூன்று இலக்க எண்களையும் கூட்டினால் 15 கிடைக்கும், இந்த 15-ல் இருக்கும் இரண்டு இலக்க எண்களையும் கூட்டினால் ஆறு என்ற எண் கிடைக்கும். இந்த ஆறு என்பது சுக்கிர பகவானுக்கு உகந்த எண். ஆகவே மகாலட்சுமி தாயாருக்கு சொந்தமான மந்திரத்தையும், சுக்கிர பகவானுக்கு உகந்த இந்த நம்பரையும் நீங்கள் எழுதும் போது அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கை மேல் பலன்

இப்படி இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஒரையில் மட்டும் செய்யாமல் பெண்கள் வீட்டில் வேலைகள் முடித்த பின்பு, ஆண்கள் தங்களது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு இருவரும் தங்கள் ஓய்வு எடுக்கும் நேரங்கள் மற்றும் சும்மா இருக்கும் நேரங்களில் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டும் அல்லது இரண்டையும் எழுதிக் கொண்டும் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்து உங்களின் வாழ்க்கை லட்சியமான வீடு கட்டுவது, நிலம் வாங்குவது அல்லது வீடு வாங்குவது போன்ற உங்களின் கனவுகள் நிறைவேறுவதற்கு தேவையான பணத்தை உங்களுக்கு தரும் அதனால் இதனை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் கை மேல் பலன் கிடைக்கும்

-விளம்பரம்-

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here