பணம் தானகவே உங்களிடம் வந்து சேர வேண்டுமா ? இந்த மூன்று பொருள் இருந்தால் மறக்காமல் இதை செய்து பாருங்கள்!

- Advertisement -

நாம் நம்மிடம் உள்ள செல்வ வளங்கள் பெருக வேண்டும் பணம் நம்மிடம் சேர வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் பரிகாரங்களும் பெரும்பாலும் மகாலட்சுமி தயாரை வேண்டிய தான் இருக்கும். ஏனென்றால் நமக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைத்தால் தான் நமது வீட்டில் பண வரவுமும் அதிகரித்து நமது வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் அடியோடு நீங்கும். மேலும் நாம் செய்யும் தொழில் மற்றும் வியாபாரங்கள் நல்லபடியாக நடக்கும். அதனால் நாம் இன்று இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் பணம் தானாகவே நம்மிடம் வந்து சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக காணலாம் வாருங்கள் பதவிற்குள் செல்லலாம்.

-விளம்பரம்-

வாசனை நிறைந்த இடங்கள்

பணம் என்பது நாம் தேடி போகாமல் அதுவே நம்மை தேடி தானாக வருவதற்கு நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் வேண்டும் அதாவது லட்சுமி தயாரை நம் வீட்டில் குடியிருக்க வேண்டும். பொதுவாக மகாலட்சுமி தாயார் நல்ல வாசனை உள்ள இடங்களில் குடியிருப்பார் அதனால் தான் நாம் பணத்தை வசியம் செய்வதற்கு கூட ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் போன்ற வாசனை நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். அதனால் இன்று நாம் செய்யப் போகின்ற பரிகாரத்தின் மூலமாகவும் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு கொண்டு வந்து தாயாரின் பரிபூரண அருளை பெற முடியும். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கும் ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் வெட்டிவேர் இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும் சரி வாருங்கள் பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.

- Advertisement -

பரிகாரம்

பொதுவாக நம் தமிழ் பண்பாட்டை பொருத்தவரையிலும் பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பெண்கள் விடியற்காலையிலே எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். அப்படி விடியற்காலையில் நம் வீட்டை சுத்தம் செய்து வாசல் தெளித்த பின்பு கோலம் போடுவதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு நாம் பரிகாரத்திற்காக வைத்திருக்கும் பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய் மற்றும் இதனுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் சிலவற்றை அந்த பாத்திரத்தில் போட்டு பாத்திரத்தை மூடி விடுங்கள். நம்முடைய கையை பாத்திரத்தின் மீது வைத்து “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு அழைப்பு

இப்படி கோலம் போடுவதற்கு முன்பாக பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து இந்த மூன்று பொருட்களை போட்டு பின் 11 முறை மந்திரத்தை உச்சரித்த பிறகு மகாலட்சுமி தாயாரை நாம் மனதார நினைத்து அந்த தண்ணீரை வாசலில் தெளித்து விட வேண்டும். மீத தண்ணீர் இருந்தால் அதை நம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றி விடலாம். இப்படி தண்ணீர் தெளித்த பின்பு கோலம் போட்டு கொள்ளலாம். பின் பாத்திரத்தில் போட்ட நாணயங்களை திரும்ப எடுத்து நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும்.. இப்படி நாம் செய்யும் இந்த செயல் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு அழைப்பதற்கு சமம்.

தொழில் மற்றும் வியாபரம் சிறக்க

அதேபோல நாம் தொழில் செய்யும் இடம் வியாபாரம் செய்யும் இடங்களில் இதைப் போன்று பாத்திரத்திலன தண்ணீர் பிடித்து மேலே சொன்ன மூன்று பொருட்களை போட்டு அதனுடன் கூடுதலாக ஒரு எலுமிச்சம் பழத்தையும் போட்டு பாத்திரத்தின் மீது கை வைத்து மந்திரத்தை 11 முறை உச்சரித்து அந்த தண்ணீரால் வாசல் தெளித்து விடவும். இதில் நாம் கூடுதலாக ஒரு எலுமிச்சை பழம் சேர்த்து செய்வது நாம் தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் கண் திருஷ்டி அதிக அளவில் படும் என்பதால் அந்த கண் திருஷ்டி கழிப்பதற்காக எலுமிச்சை பழம் சேர்க்கிறோம். நாம் தினமும் காலையில் இதை செய்து வந்தோம் என்றால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்துவிடும். பின் பணம் என்பது நம்மை தேடி தானாகவே வரும். அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here