வெறும் 7 நாட்களில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வீட்டில் பணம் சேர நாம் செய்ய வேண்டியவை!

- Advertisement -

கடன் வாங்க கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டே தான்‌ போகிறது.

-விளம்பரம்-

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு

வெள்ளிக்கிழமை என்றாலே அனைவருக்கும் தெரியும் மகாலட்சுமியை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்று. மகாலட்சுமி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது செல்வம் தான். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் வெள்ளிக்கிழமையில் வீட்டிலியே மகாலட்சுமியின் வழிபாட்டிவை மேற்கொள்வது மகாலட்சுமியின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த வழிபாட்டிற்கு நன்கு மணமான பன்னீர் ரோஜா மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். வேறு ரோஜா பூக்களை பயன்படுத்தக்கூடாது. இந்த வழிபாட்டை நாம் கோவிலுக்கு சென்ற தான் செய்ய வேண்டும். ஒரு வேலை கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரின் கோவிலுக்கு சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பொழுது 7 பன்னீர் ரோஜா பூக்களை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையோ அல்லது உங்களுக்கு யாராவது பணம் தர வேண்டும் என்றாலோ, பண தேவைகள் அல்லது பணப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை மகாலட்சுமி தாயாரிடம் முன்வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பெருமாள் கோவில் அனைத்திலும் மகாலட்சுமி தாயார் கண்டிப்பாக இருப்பார். அதனால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, வியாபாரம் பெருக வேண்டும் என்றும் எனக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்றும் மனதார வேண்டி விட்டு உங்கள் கையில் இருக்கும் ரோஜா மலர்களை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை காலை 6:00 மணி முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8:00 மணிக்கு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமை நீங்கள் செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சியான செல்வ நிலை அதிகரிக்கும். பெண்களால் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய முடியவில்லை என்றால் அடுத்த வெள்ளிக்கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பு உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் முன்வைத்து மனதார வேண்டி இந்த மலர்களை வைத்து விடலாம். இது மிகவும் எளிய பரிகாரம் தான், இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே காணலாம்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்குவதற்கு இந்த இந்த பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்!

-விளம்பரம்-