யார் கையில் பணம் சேரும் ? யாரிடம் பண புழக்கும் இருந்து கொண்டே இருக்கும் என்று தெரியுமா ?

- Advertisement -

இந்த உலகில் பணத்தையும் தாண்டி நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல விஷயங்கள் உள்ளன என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இது பேசுவதற்கு சரியாக இருந்தாலும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. அனைவரிடத்திலும் பணம் புழங்கி கொண்டே இருக்காது. இன்று ஒருவரிடத்தில் இருக்கும் பணம் நாளையை வேறு ஒருவர் இடத்தில் இருக்கும். ஆனால் சிலரிடம் மட்டும் பண புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை பார்த்து நம்மை அறியாமலே நாமே பொறாமைப்படும் அளவிற்கு செய்துவிடும் இந்த பண கஷ்டம். அப்படி பணம் யார் யார் கையில் அதிகமாகிக் புழங்கும் ? யாருடைய கையில் பணம் சேர விரும்பும் ? மகாலட்சுமி யாரிடத்தில் அமர்வால் ? என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கைராசியானவர்கள்

கைராசியானவர்கள் கையில் மகாலட்சுமி என்றுமே குடியிருப்பாள். அதாவது நாம் ஒரு சிலரை கைராசியானவர்கள் என்று கூறுவோம் அவர்களிடமிருந்து நாம் ஏதாவது வாங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சிலர் சமையல் கட்டியிலேயே வாழ்வார்கள் ஆனால் அவர்கள் செய்யும் சமையலில் அந்த அளவுக்கு ருசி இருக்காது. ஒரு சிலர் சில உணவுகளை ஈசியாக செய்து விடுவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் சமையலின் ருசி அபாரமாக இருக்கும். இவரைப் போன்ற நபர்களை தான் கைராசியானவர்கள் என்று நாம் குறிப்பிடுவோம் இவர்களிடம் மகாலட்சுமி என்றுமே குடியிருப்பாள்.

- Advertisement -

குணங்கள்

ஒரு மனிதனின் குணம் அவனால் எவரும் பாதிக்காத வண்ணம் இருக்கும் போதும், மற்றவர்களுக்கு துன்பம் வரும்போது கூட அவர்களுக்கும் துன்பத்தை கொடுக்காமல் தன்னை வருத்திக் கொள்வார்கள், தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்பவர்களும், வாழ்க்கையில் நேர்மையுடன் நடந்து கொள்வார்களுடன் மகாலட்சுமி என்றுமே இருப்பாள். இவர் கையிலும் பண புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற குணாதிசயங்கள் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் இடம் ஏராளமாக இருக்கும். அதனால் தான் நம் வீட்டில் இருக்கும் பெண்களிடம் எப்போதும் பணம் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

நல்ல எண்ணங்கள்

அதேபோல் அனைத்து பெண்களிடமும் பணம் என்பது புழங்குவது கிடையாது என்னதான் வீட்டில் உள்ள ஆண்கள் பணத்தை சம்பாதித்தாலும் பெண்களைப் போல உழைப்பும், இரக்க குணமும் குறிப்பாக பொறுமையும் ஆண்களிடத்தில் இருக்காது. எல்லா கஷ்டங்களையும் குடும்பத்திற்காக தாங்கிக் கொண்டு தன் குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பெண்களின் எண்ணங்களும் நல்ல எண்ணங்களாக இருந்து விட்டால் போதும் அவர்கள் கையில் பணப்புழக்கம் என்பது இருந்து கொண்டே இருக்கும்.

உங்களால் பிறர் வாழும் போது

இன்று ஒருவர் 10 நபரை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் நாளையே கூட நூறு பேரை வைத்து வேலை பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விடுவார். இந்த வளர்ச்சி எப்படி என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா ? உங்களால் பிறர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு பயனுள்ளவாறு நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் மகாலட்சுமி தங்குவாள். அதாவது நீங்கள் பத்து நபரை சம்பளத்திற்கு தான் வேலைக்கு வைத்திருப்பீர்கள். இருந்தாலும் அந்த பத்து நபரின் குடும்பமும் உங்களை நம்பி உள்ளது என்ற பட்சத்தில் இந்த ஒரு காரணத்திற்காகவே மகாலட்சுமி உங்கள் வசம் இருப்பாள்.

-விளம்பரம்-

முன்னோர்கள் செய்த புண்ணியம்

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த தான தர்மங்களை நாமும் கடைப்பிடித்து, நாம் நல்வழியில் பயணித்து வரும் பொழுது நம்மிடமும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதாவது ஒருவர் பரம்பரை பரம்பரையாக பணக்காரராக இருந்து கொண்டே வருகிறார் என்றால் அவர்களுடைய முன்னோர்களை பற்றி கேட்டுப் பார்த்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏராளமான புண்ணியங்களை, தான தர்மங்களையும் செய்து அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் செய்த புண்ணியமே அவர்கள் சந்ததியினருக்கு வந்தடைந்து கொண்டிருக்கும் இதனாலேயே ஒரு சிலர் கையில் பணப்புழக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here