2024 மகா சிவராத்திரி ஆன்று 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூட போகும் நான்கு யோகங்கள் என்னென்ன தெரியுமா?

- Advertisement -

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகின்ற இந்த மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வணங்கி பூஜை செய்து இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து விரதம் இருந்தால் நாம் எண்ணியது அனைத்தும் நிறைவேறும். அவ்வாறு சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அனைத்து இடங்களிலும் இந்த சிவராத்திரி பூஜை ஆனது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த மிகப்பெரிய சிவராத்திரி என்று சிவபெருமானை மனதார நினைத்து வழிபட்டால் நமக்கு நல்லதே நடக்கும்.

-விளம்பரம்-

300 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்

சிவபெருமானை வழிபடக்கூடிய ஒரு சிறப்பான நாள் அன்று வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் பலவிதமான நன்மைகளையும் அள்ளித் தரக்கூடிய நான்கு யோகங்கள் ஒன்று கூட போகிறது. இவை மிகவும் அரிதாக முன்னுறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒன்று சேரும். அப்படி இந்த 2024 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இந்த நான்கு யோகங்களும் ஒன்று கூட போகிறது. அளவில்லா மகிழ்ச்சிகளை அள்ளித் தரக்கூடிய இந்த நான்கு யோகங்கள் என்னென்ன அவைகள் ஒன்று கூடினால் ஏற்படக்கூடிய சிறப்புகள், இதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் என அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரக்கூடிய இந்த மகா சிவராத்திரி ஆனது சிவபெருமானே வழிபடக்கூடிய ஒரு மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வரக்கூடிய இந்த மகா சிவராத்திரி இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் அரிதாக ஒன்று சேரக்கூடிய யோகங்கள் இந்த வருடம் ஒன்று சேரப் போகிறது. எனவே ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இந்த வருட மகா சிவராத்திரி நாளானது மிகவும் சிறப்பான நாளாகும். எனவே இந்த சிறப்பான நாள் என்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவது நமக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கும்.

மகா சிவராத்திரி என்று ஒன்று கூட போகும் நான்கு யோகங்கள்

ஜோதிட கணிப்புகளின் படி 2024 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மாசி மாதம் வரக்கூடிய இந்த மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தயோகம்,சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிர பிரதோஷம் போன்ற நான்கு யோகங்களும் ஒன்று கூட போகிறது. எனவே தொழில் வீடு வருமானம் நிம்மதி என அனைத்திற்காகவும் சிவபெருமானிடம் வேண்டக்கூடிய ஒரு முக்கியமான நாள் தான் இந்த வருட மகா சிவராத்திரி. சர்வாத்தை சித்தயோகம் என்பது நாம் சிவபெருமானிடம் வேண்டக்கூடிய அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய ஒரு யோகமாகும். ஒருவருக்கு செல்வ செழிப்பான வாழ்க்கை மகிழ்ச்சி நிம்மதி என அனைத்தையும் பெறுவதற்கு வேண்டி ஒரு முக்கியமான நாள் தான் சுக்கிரவார பிரதோஷம் நாள். மந்திர ஜெபம் மற்றும் தியானம் போன்றவற்றை கை கூட வைக்கும் யோகம் தான் சிவயோகம். சர்வார்த்த சித்தி யோகம் என்பது மகா சிவராத்திரி அன்று காலை 06.38 முதல் 10.41 வரை இருக்கும். சிவயோகம் மகா சிவராத்திரியன்று முழுவதுமாக உள்ளது.