வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம்.
தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மலாபார் முட்டை பரோட்டா. தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும் போட்டி வைத்தால் அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊரில்.
சூடான பரோட்டாவை பிய்த்து, அதன் மேல் சால்னா ஊற்றி, அப்படியே சாப்பிட்டால் ஆஹா! அதன் சுவையை வார்த்தைகளால் கூற முடியாது. சுவைத்து சாப்பிட்டால் தான் அதன் சுவையை உணர முடியும். பரோட்டா என்பது அனைவருக்கும் பிடிக்கும் அதேபோல் நீங்கள் மலபார் முட்டை பரோட்டா சாப்பிட்டு இருக்கீர்களா? அது எப்படி அவ்வளவு சுவையாக இருக்கும்.
அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். பொதுவாக பரோட்டா செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் அதனாலே அதை வீட்டில் செய்ய யாரும் விரும்பவே மாட்டார்கள். இனி கவலை வேண்டாம் வீட்டில் சுலபமான முறையில் எப்படி மலபார் முட்டை பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.
மலபார் முட்டை பரோட்டா | Malabar Egg Parota Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தவா
தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா மாவு
- 1 கப் கோதுமை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1/4 கப் சூடான தண்ணீர்
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 4 முட்டை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மைதா மாவு மற்றும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சலித்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதனுடன் தேவையான அளவு உப்பு, சக்கரை, முட்டை, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பரோட்டா மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து ஒரு துணியால் மூடி 3 மணி நேரம் ஊற விடவும்.
- பின் மாவை சிறிதளவு எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உருண்டைகள் மீது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
- பின் சிறிது நேரம் கழித்து பலகையில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை வைத்து சப்பாத்தி போல் தேய்த்து நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் தேய்க்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு தவாவை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு பரோட்டாவையும் கைவிரல்களால் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மலபார் முட்டை பரோட்டா தயார். இதற்கு சிக்கன் கிரேவி அல்லது குருமா வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான மலபார் நண்டு மசாலா சுலபமாக இப்படி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!