சம்பாரித்த பணம் தடையில்லாம் வீடு வர! கையில் சிறது மரிக்கொழுந்து இருந்தால் போதும்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் ஒரு மனிதனின் வாழ்நாளில் குறிக்கோளாக இருப்பது பணம் மட்டுமே அதை நோக்கி தான் மனிதர்களான நாம் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். சாப்பாடை கூட நாம் வயிறு நிறையும் அளவிற்கு சாப்பிட்டு முடித்துவிட்டு போதும் என்று கூறி விடுவோம். ஆனால் ஒரு மனிதனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அவன் ஆசையை அடங்கவே அடங்காது என்றால் அது பணத்தின் மீது உள்ள ஆசை மட்டுமே. அப்படி என்றால் ஒரு மனிதன் பணத்தின் மீது உள்ள ஆசையால் மட்டுமே பணம் சம்பாதிக்கிறான் என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அவன் அவனுக்காகவும் அவன் குடும்பத்தினருக்காகவும் அவன் பின்வரும் தலை முறைகளும் அவனைப் போல் கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கத்திற்காகவும் பணம் சம்பாதிக்கிறான். அதனால் இந்த ஆன்மிகம் குறித்த தொகுப்பில் நாம் பணம் நம் கையில் இருந்து கொண்டே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் சொல்லலாம்.

-விளம்பரம்-

பரிகாரம்

இப்படி தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க ஆசைப்படும் மனிதன் அதை வேலைக்கு சென்றோ அல்லது சொந்தமாக தொழில் செய்தோ, ஏன் தினசரி கூலிக்காக தொழிலாளியாகவும் வேலை செய்து சம்பாதிக்கிறான் இருந்தாலும் அவர்கள் சம்பாரிக்கும் பணம் அவர்களிடம் நிலைப்பதில்லை, கையில் பணம் புழக்கம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். இது போன்று இருப்பவர்களுக்கு அவர்கள் கையில் பணப்பழக்கம் இருந்து கொண்டே இருப்பதற்காகவும் அவர்கள் சம்பாதித்த பணம் அவர்களுக்கு தடை இல்லாமல் வருவதற்காகவும். ஆன்மீகத்தில் சொல்லப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இந்த மரிக்கொழுந்து பரிகாரம்.

- Advertisement -

மாரிக்கொழுந்து பரிகாரம்

நாம் இந்த மரிக்கொழுந்தை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். பலர் ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருப்பீர்கள் “மரிக்கொழுந்துக்கு மயங்காதவர் யாருமில்லை” என்று ஏனென்றால் மரிக்கொழுந்துக்கு அனைத்தையும் மயக்கும் சக்தியும் ஏன் வசியம் செய்யும் சக்தியும் கூட இயற்கையாகவே அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட மரிக்கொழுந்திருக்கு பணத்தை இருக்கும் சக்தியும் சற்று அதிகம் தான். அதனால் இந்த மரிக்கொழுந்தை வைத்து நம்மிடம் பணம் சேர்வதற்கு ஒரு பண ஈர்ப்பு பரிகாரத்தை தான் இன்று நாம் செய்யப் போகிறோம் சரி பாருங்கள் பரிகாரம் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.

பரிகாரம் செய்முனற

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் கர்ச்சீப் சைசில் இருக்கும் ஒரு தூய்மையான வெள்ளை துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளை துணியை விரித்து வைத்து அதன் மேல் ஒரு கட்டு மரிக்கொழுந்தை வைத்து அதனுடன் சிறிது தாழம் பூவையும் வையுங்கள். பின் அதன் மேல் குங்குமம் மற்றும் தூள் செய்த பச்சை கற்பூரத்தை தூவி பின்னர் அந்த துணியை அப்படியே மூட்டையாக கட்டி விடுங்கள். இப்படி கட்டிய இந்த சிறிய மூட்டையை நீங்கள் வீட்டில் பணம் வைத்து இருக்கும் இடம் அல்லது தங்க நகைகளை வைத்திருக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி நம் வைத்ததும் மரிக்கொழுந்து அதன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடும்.

வாஸ்து, தரித்திரம், தோஷம்

அதேபோல் இந்த மரிக்கொழுதை நீங்கள் அடிக்கடி பணம் போட்டு எடுத்து செலவழிக்கும் பர்ஸ் அல்லது வீட்டில் இருக்கும் டப்பா என எதுவாக இருந்தாலும் அதில் போட்டு வைத்தால் அதில் பண புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதுபோல மரிக்கொழுந்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து அதன் பின்பு மரிக்கொழுந்து ஊற வைத்த தண்ணீரை நம் வீடு முழுவதும் தெளித்தால் நம் வீட்டில் இருக்கும் வாஸ்து சார்ந்த பிரச்சினைகள் தரித்திரம் எல்லாம் தீர்ந்து நமது வீடே ஒரு லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும். மேலும் மரிக்கொழுந்தை உறவைத்த தண்ணீரில் மயில் இறகை நனைத்து நம் தலையில் தேய்த்து வந்தால் நம்ம பிடித்து இருக்கும் கண் திருஷ்டி, தோஷம் எல்லாம் கூட விலகி ஓடிவிடுமாம் அந்த அளவிற்கு சக்தி மரிக்கொழுந்துவிற்கு உள்ளது.

-விளம்பரம்-

பணத்தை ஈர்க்கும்

இப்படி இவ்வளவு சக்தி நிறைந்த மரிக்கொழுந்தை நீங்கள் சிறிய மூட்டையாக கட்டி நீங்கள் பணம் வைத்திருக்கும் இடம் அல்லது நகை வைத்திருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் அந்த மரிக்கொழுந்து உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்க்கும். அதன் காரணமாக நீங்கள் சம்பாதித்த பணம் வீண் செலவு ஆகாமல் வீட்டில் ஒரு சேமிப்பாக மாறும் அதனால் உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு வரும் பணம் கூட தடையில்லாமல் வரும் அதனால் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பார்த்தால் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here