ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ள 27 நக்ஷத்திரம் வரும் காலத்தில் எந்த நச்சத்திரத்தில் எல்லாம் திருமணம் செய்யலாம்? எந்த நக்ஷத்திரம் வரும் காலத்தில் திருமணம் செய்ய கூடாது? இதை பற்றி கீழே காணலாம்.
திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்ட விஷயம். இதில் அவசர கோலத்தில் அல்லித்தெளித்ததாக இல்லாமல் பொருத்தம் பார்க்கும் போது எந்தெந்த பொருத்தங்கள் மற்றும் நக்ஷத்திரம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
வான் மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் எண்ண முடியாத படி கொட்டி கிடந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தில் மானுட ஜீவன்களுக்குப் பயன்படும் நக்ஷத்திரங்கள் என்று சொல்லப்படுபவை 27 மட்டுமே.
அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்வசு, எனப்படும் உணர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய இவையே 27 நக்ஷத்திரம் ஆகும்.
மேற்கண்டவற்றுள் ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய நக்ஷத்திரங்கள், வரும் களங்களில் திருமணம் செய்வது என்பது மிகவும் உத்தமம்மற்றபடி பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ஆகிய நக்ஷத்திரங்கள், வரும் களங்களில் திருமணம் வைப்பது சாஸ்திரப்படி ஆரோக்கியமானது இல்லை, அது மட்டும் அல்ல மேற்கண்ட நக்ஷத்திரங்கள் காணப்படும் நாளில் கீழ்கண்டவற்றையும் செய்தல் கூடாது.
அதன் படி
1. சுபகாரியங்களுக்கு செல்லும் போது சந்தித்து பேசுவது தவிர்க்கவும்.
2. வெகு தூரம் பயணம் செய்வது தவிர்ப்பது நல்லது.
3. அறுவை சிகிச்சைகள் உட்பட பெரிய அளவில் எந்த ஒரு மருத்துவ சிகிச்சைகளை தவிர்த்தல் நல்லது.