பீரோவுக்கு அடியில் இந்த 2 பொருட்களை மட்டும் மறைந்து வையுங்கள் போதும்! வீட்டில் பணம் தானகவே சேரும்!

- Advertisement -

இந்த உலகில் நாம் அனைவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் ஒட தான் ஒடி கொண்டு இருக்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை செலவு மட்டும் செய்யாமல் சேர்க்கவும் வேண்டும் எனவும் விரும்புவோம். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு வருமானம் வருவதை பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் அவர்கள் சேமிக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள் அதையும் மீறி எப்படியாவது அனவசியாமாக செய்யும் செலவுகளை தவிர்த்து விட்டு இருக்கிற பணத்தில் குடும்பத்தை நடத்தி சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்தாலும் ஏதாவது ஒரு எதிர்பாராத பெரிய செலவு வந்து சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக வீணாக்கி விடும்.

-விளம்பரம்-

கண்ணுக்கு தெரியாத சக்திகள்

நான் மேலே பார்த்த மாதிரி சில குடும்பங்கள் கஷ்டப்பட்டாலும் இன்னும் சில குடும்பங்களுக்கு வருமானத்திற்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது அவர்களுக்கு பல வழிகளில் வருமானம் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அவர்களால் சேமிக்கவே முடியாது அவர்களை தேடி வரும் வருமானம் அவர்களின் செலவுக்கே போதுமானதாக இருக்கும் அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஏதாவது ஒரு வழியில் வீண் விரயமாகி கொண்டே தான் இருக்கும். இப்படி நாம் பணத்தை வீண் விரயமாக்குவது நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத சக்திகள் இடம் இருந்து எப்படி இந்த பணத்தை பாதுகாப்பது சேமிப்பது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பரிகாரம் செய்ய தேவையானவை

உங்கள் வீட்டில் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் உங்கள் பணத்தை வீண் விரயமாக்கும் சக்தி கண் திருஷ்டிக்கும், எதிர்மறையான சக்திகளுக்கு மட்டுமே உண்டு. அப்படி அந்த இரண்டு சக்திகளையும் உங்கள் வீட்டை விட்டு நீக்க நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு தேவையான இரண்டு பொருள் கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம். இந்த பரிகாரத்தில் நாம் பயன்படுத்த எடுத்துக் கொண்ட கல் உப்பின் மகத்துவத்தை பற்றி இதற்கு முந்தைய பதிவில் பதிவியிலேயே நீங்கள் நிறைய படித்திருப்பீர்கள் இருந்தாலும் சொல்கிறேன். கல் உப்பு நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி, கண் திருஷ்டி, எதிர்மறையான சக்திகளை தனக்குள் ஈர்த்துக் கொள்ள கூடியது. எலுமிச்சை பழம் நம் மனதில் நினைக்கும் விஷயங்களை நமக்கு நடத்தி தரும் சக்தி வாய்ந்த கனியாக இருக்கும்.

பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணம் ஒன்று எடுத்துக் கொண்டு அதில் நாம் வைத்திருக்கும் உப்பை நிரப்பி கொள்ளுங்கள். பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை உங்களின் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்களின் குலதெய்வத்தை மனதார நினைத்து நாங்கள் பீரோவில் வைத்திருக்கும் எங்கள் பணம் எக்காரணம் கொண்டும் கண் திருஷ்டி, கெட்ட சக்திகள் மூலமாக வீண் விரயமாகாமல் இருக்க வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அதற்கு இந்த எலுமிச்சம் பழம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லி உங்கள் வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பீரோவுக்கு அடியில் வையுங்கள்

இப்படி உங்கள் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு கல்லுப்பு வைத்திருக்கும் கிண்ணம் மற்றும் எலுமிச்சம் பழத்தை உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் பீரோவின் அடியில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டு பீரோவில் அடிப்பகுதியில் இரண்டு காலிருக்கும் நடுவில் இந்த கிண்ணத்தையும், எலுமிச்சம் பழத்தையும் வைத்து உள்ளே சற்று தள்ளியே வைத்து விடுங்கள். இப்படி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தது எக்காரணம் கொண்டும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

7 நாட்கள் இருக்க வேண்டும்

நீங்கள் உங்கள் வீட்டு பீரோவின் அடியில் வைத்து இருந்த கிண்ணம் மற்றும் எலுமிச்சம் பழம் ஏழு நாட்கள் வரை யார் கை படாமலும் அங்கேயே இருக்க வேண்டும் ஏழு நாட்களுக்கு பிறகு உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் எடுத்து எலுமிச்சம் பழத்தை மனிதனின் காலடி படாத இடங்களில் போட்டு விடுங்கள். உப்பை தண்ணீரில் கரைத்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மணல் நிறைந்த இடங்களில் ஊற்றி விடுங்கள். இது எதுவும் முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் உப்பை கதைத்து விட்டு, எலுமிச்சம் பழத்தை அந்த நீர் நிலையில் போட்டு விடுங்கள்.

புதிய உப்பு

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது பரிகாரத்திற்கு பயன்படுத்தும் உப்பு வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பாக இல்லாமல் இதற்கென்று தனியாக கடையில் உப்பு வாங்கி பயன்படுத்துவது சிறப்பான ஒன்று. அதேபோல நீங்கள் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தும் எலுமிச்சை பழமும் அடி, ஏதும் படாமல் கரும்புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி நான் மேலே சொன்னது போல் இந்த பரிகாரங்களை நீங்கள் சரியான முறையில் செய்துவிட்டாலே போதும் உங்கள் வீட்டில் வீண் விரையமாகும் பணம் தடுக்கப்பட்டு உங்கள் வீட்டில் சேமிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே போகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.