பணம் தடையில்லாம் வீட்டுக்கு வர! இந்த தவறுகளை இனி செய்யாமல் இருங்கள்!

- Advertisement -

ஒரு சிலர் பேச்சுவாக்கில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பணம் தேவையில்லை என்று சொல்வார்கள் ஆனால் இது பேசுவதற்கு சரியாக இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வராது. உங்களிடம் பணம் இருந்து கொண்டே இருப்பதற்காக ஒரு சில விஷயங்களை ஆன்மீக ரீதியாக செய்யும் போது பணம் வேண்டாம் என்று சொன்னாலும் வீட்டை தேடி வந்து கொண்டே இருக்கும் அதேபோல் சில விஷயங்களை நாம் தவறாக செய்யும் போதும் நம் வீட்டில் இருக்கும் பணம் கூட நம் கையில் தாங்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் அப்படி நாம் என்ன என்ன தவறு செய்கிறோம் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்

-விளம்பரம்-

சாஸ்த்திரங்கள்

தேவ சாஸ்திரங்கள் என்ன கூறுகிறது என்றால் ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் பெண்கள் தங்கள் கைகளால் விளக்கேற்றும் போது அந்த வீடு லட்சுமி கடாச்சத்தால் நிறையும் என்கிறது. அதே சமயம் ஆண்கள் விளக்கு ஏற்றினால் அந்த வீட்டில் செல்வம் சேராது என்றும் சாஸ்திரங்கள் நமக்கு சொல்கின்றது அதுபோல் உங்கள் வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் எந்த வீடு அசுத்தமாக இருக்கிறதோ அங்கு சனி பகவான் வந்து வாசம் செய்வார் அதனால் நீங்கள் வீட்டை சுத்தம் செய்து மங்களகரமாக வைத்திருக்கும்போது அங்கு மகாலட்சுமி வந்து வாசம் செய்வாள் மகாலட்சுமி ஒரு இடத்தில் வாசல் செய்கிறாள் என்றால் அங்கு பொன், பொருள், பணம் என சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் அதேபோல் வீட்டின் சுவற்றில் கரையான், பூரான், சிலந்தி போன்றவை நடமாட்டம் இருக்குது என்றால் அந்த வீட்டில் செல்வம் சேர்வது என்பது சந்தேகம் தான்.

- Advertisement -

எச்சி பாத்திரங்கள்

நீங்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்து போட்டிருக்கும் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைத்தி விட வேண்டும் உங்கள் வீட்டில் எச்சில் பாத்திரம் கிடந்து கொண்டே இருக்கிறது என்றால் செல்வம் சேராமலே இருக்கும். நீங்கள் எந்த விஷயத்தை செய்யும்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் செய்ய வேண்டும் இல்லை வராது முடியாது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துபரிடம் பணம் தங்கவே தங்காது. யோசகம் கேட்பவர்களிடம் இல்லை என்ற வார்த்தையும் சொல்லக்கூடாது அதற்கு பதிலாக நீங்கள் நினைக்கும் வார்த்தையும் பதிலாக சொல்லலாம்.

அன்னபூரணி சாபம்

உங்கள் வீட்டானது எப்போதும் வெளிச்சமாகவே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் எந்த ஒரு வீடு இருளில் மூழ்கிக் கிடைக்கிறதோ அந்த வீட்டில் எப்போதும் பணம் வரவு இருக்கவே இருக்காது அதனால் நீங்கள் வெளியே செல்லும் பொழுது சிறிய மின் விளக்காகவது ஏரிய விட்டு செல்லுங்கள். அந்த விளக்கு உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு வழி வகுத்து கொடுக்கும். அதேபோல் சாப்பாட்டின் மீது தனது வெறுப்பை காட்டுபவர்கள் அன்னபூரணியின் சாபத்திற்கு உள்ளார்கள் அன்னபூரணியின் சாபம் என்பது உங்களுக்கு கிடைக்கும் செல்வங்களை, பணங்களை கிடைக்காமல் தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்று. அதனால் உணவே என்றுமே வீணாக்காதீர்கள் குறிப்பாக அரிசி உப்பு பால் சர்க்கரை இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் தீராமல் இருக்க வேண்டும் காலியாவதற்கு சில நாட்களுக்கு முன்னாடியே வாங்கி வைப்பது இன்னும் சிறந்ததாக இருக்கும்.

பணம் தடையில்லாமல் வரும்

இப்படி இது போன்ற செயல்களை நீங்கள் தவறாமல் செய்யும் பட்சத்தில் உங்கள் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் லட்சுமி கடாட்சம் இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்று அர்த்தம் இதே போல் நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை எல்லாம் முறையாக திருத்தி சரிவர செய்து வந்தாலே போதும் உங்களில் வீட்டிற்கு பணம் வருவதை எவராலும் தடுத்து நிறுத்தவே முடியாது உங்களுக்கு தடையில்லாமல் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here