பண வரவு அதிகரிக்க வேண்டுமா ? ஒரு சிறிய மண் பானை போதும்!

- Advertisement -

இந்த உலகில் வாழ்வதற்கு பணம் முக்கியம் இல்லை பணத்தையும் தாண்டி நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது என பலர் கூறுவார்கள் ஆனால் அது எல்லாம் வாய் வார்த்தைக்கு சொல்வதுதான். நாம் இந்த உலகில் பணம் இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது அந்த அளவிற்கு பணம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது இல்லை நம் வாழ்வாகவே அது மாதிரி விட்டது. ஆனால் பலருக்கும் பணக்கஷ்டம், பணம் தட்டுப்பாடு என இந்த பணமே அவரது வாழ்க்கையின் தடைகளாக இருக்கிறது அவர்களின் வீட்டில் எல்லாம் பணம் பெருக வேண்டும் என்றால் அதற்கேற்ற ஒரு பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நேர்மறை ஆற்றல்

இப்படி பணக்கஷ்டத்தால் வாடி போன நமது வீட்டில் தாராளமாக பணம் புழங்குவதற்கும் நமது வீட்டின் செல்வ வளம் அதிகரிக்கவும நமது வீட்டில் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும். அப்போதுதான் பணம் நம்மை தேடி வரும் நம் கையிலும் நிலையாக தங்கும். அதற்கு நேர்மறை ஆற்றல் கொண்ட ஒரு பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். இந்த நேர்மறையான ஆற்றலை உருவாக்கும் ஆற்றலை கொண்ட ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான். நாம் இன்று காணப் போகிறோம் வாருங்கள் அது என்ன பரிகாரம் என்று பார்த்துவிடலாம்.

- Advertisement -

பரிகாம் செய்ய தேவையான பொருள்

இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றால் நமக்கு கல் உப்பு, படிகார கல் மற்றும் ஒரு கண்ணாடி குடுவை அல்லது ஒரு மண்பானை இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தேவைப்படும். இந்த பொருட்ள் தான் நாம் பரிகாரம் செய்வதற்கு தேவைப்படுகின்றனர். இந்த பரிகாரம் செய்யும் போது தங்கம், பித்தளை, பிளாஸ்டிக், வெள்ளி போன்ற எந்த பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. இந்த பரிகாரத்திற்கு மண்ணால் செய்யப்பட்ட பொருட்களையும் கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பரிகாரத்தின் சக்தி அதிகமாக இருக்கும்.

பரிகாரம்

எப்படி நமது வீட்டில் பண வரவை அதிகரிக்கும் பரிகாரத்தை செவ்வாய் வியாழன் வெள்ளி இந்த மூன்று நாட்களில் மட்டும் செய்யலாம். அதற்காக முதலில் மண் பாண்டம் நிறைய உப்பை எடுத்துக்கொண்டு அதன் நடுவில் ஒரு சிறிய படிகார கல் துண்டு சொறி வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் பீரோவின் அடிப்பகுதியில் யருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். இந்த பரிகாரம் யார் செய்கிறாரோ அவர்களை தவிர வேற யாருக்கும் இந்த பொருள் அங்கு இருப்பது தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவாசை

இப்படி இந்த பரிகாரத்தை செவ்வாய் வெள்ளி வியாழன் நாட்களிலும் மட்டுமே செய்து வரலாம். மேலும் இந்த பரிகாரத்தை செய்து விட்டு அடுத்த அமாவாசை என்று வருகிறதோ அன்று நாம் மண் பானையில் வைத்திருக்கும் உப்பை எடுத்துவிட்டு புதியதாக உப்பை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் வைத்திருக்கும் பழைய உப்பை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளை கரைத்து விடுங்கள் அல்லது தண்ணீரில் கரைத்து உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். படிகாரக் கல்லை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். இப்படி சரியான முறையில் செய்து வந்தால் அதனுடைய பலன் விரைவாக உங்களை வந்து சேரும். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here