இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கும் தருவாயில் இருந்து அவன் இறந்து போகும் தருவாயில் வரை இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வில் அவனுக்கு முக்கியமான ஒன்றாக தேவைப்படுவது பணம் மட்டுமே அந்த பணம் மட்டுமே அவன் வாழ்வில் எவ்வளவு அப்படி வாழ வேண்டும் எவ்வாறு வாழ போறான் என்பதனை தீர்மானிக்க கூடியது. அப்படி மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப்போன பணத்தால் தன் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளமா அப்படி நமது வாழ்க்கை முக்கிய பங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பணத்தை நம் வசமாக்குவது எப்படி என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண போகிறோம்.
முன்னேற்றம்
பணம் நம்மிடம் சேர வேண்டும் என்றால் அதற்கு உழைப்பது தான் ஒரே வழி அப்படி உழைத்து அந்த பணம் நம்மளது வாழ்வில் நமக்கு ஒரு முன்னேற்றத்தை தந்தால் தான் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். அப்படி அந்த முன்னேற்றத்தை எப்படி கொண்டு வருவது என்பதை தான் இந்த ஆன்மீக தொகுப்பில் பார்க்க போகிறோம். அப்படி நம் கைகளில் இருக்கும் பணம் நம் கையில் இருந்து நமக்கு பல மடங்காக பெருகுவதற்கு நாம் ஆன்மீக ரீதியான சில விஷயங்களை நாம் செய்யும் போது அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
பத்து ரூபாய் நோட்டுகள்
இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்காக ஒரு 200 ரூபாய் நோட்டை எடுத்து அதற்கு பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளுங்கள் இப்படி நாம் மாற்றிய பத்து ரூபாய் நோட்டுகளை எக்காரணம் கொண்டும் செலவு செய்யக்கூடாது. இப்படி நாம் வைத்திருக்கும் பத்து ரூபாய் நோட்டுகளை தினசரி என்ன வேண்டும் எண்ணும்போது, பத்து, இருபது, முப்பது என்று நோட்டை எண்ணாமல் அதற்கு பதிலாக ஒவ்வொரு நோட்டை என்னும்போது கவுண்ட் என்ற வார்த்தையை உச்சரித்து நாம் எண்ண வேண்டும். அதன் பிறகு பணத்தை எண்ணி முடித்தவுடன் வழக்கம் போல் பீரோவில் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி நாம் தினமும் இதை செய்யும்போது பணம் நம்மை தேடி வரும்.
பணம் பெருகும்
எதற்காக இப்படி செய்கிறோம் என்றால் இப்படி நாம் 200 ரூபாய் பத்து ரூபாய் தாளாக எடுக்கும் போது அது நம் கையில் ஒரு பெரிய தொகையாக தெரியும் அந்த பணத்தை நாம் தினசரி இது போன்று எண்ணும் பொழுது நாம் கையில் நிறைய பணம் இருப்பதால். நம்மிடம் இவ்வளவு பணம் உள்ளது என்ற எண்ணம் உங்களுக்கு வரும் இந்த எண்ணம் உங்களிடம் வரும் பொழுது உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்கும் நீங்கள் அந்த பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது கவுண்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது அது உங்கள் கைக்கு வரும் பணத்தை வசியம் செய்து நிலையாக தங்க வைக்கும்.
கொடுக்கல், வாங்கல்
அது போன்று நீங்கள் உங்கள் கையில் இருந்து பணத்தை கொடுக்கும் போது பணத்தை கையாளும் போதும் பணத்தை மடித்து அந்த பணத்தின் மூடி இருக்கும் பகுதி பணத்தை கொடுப்பவர்கள் இருக்கும் பக்கமும், திறந்திருக்கும் பக்கம் உங்களை பார்த்தூ இருக்குமாறு நீங்கள் அடுத்தவரிடம் பணம் கொடுக்க வேண்டும். இப்படி நீங்கள் பணம் கொடுக்கும் போது உங்கள் கையில் இருக்கும் பணம் மறுபடியும் பெரிய உங்களிடமே சேரும் என்னதான் இவ்வாறு செய்தாலும் கூட பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கையாளும் பொழுது இப்படி செய்து பாருங்கள் உங்கள் கையில் இருக்கும் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.