என்னதான் வருடம் முழுவதும் அயராது உழைத்தாலும் சிலர் கையில் பணம் தங்காது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வீண் செலவாகி கொண்டே இருக்கும். அதனால் நாம் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணம் நம் கையிலே நிலையாக தங்குவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிகள் உள்ளது அதற்காக நாம் வீட்டிலோ, வேலை பார்க்கும் நிறுவனங்களிலோ அல்லது சொந்தமாக தொழில் செய்யும் இடங்களிலோ நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்தி சரி செய்து கொண்டாலே. நமக்கு வரும் பணம் நிலையாக நாம் கையிலேயே தங்கும் அது என்னென்ன தவறுகள் என்பதை பற்றி இந்த ஆண்மை குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
பூஜை அறை
நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இரண்டு கடவுள்களின் சிலைகளை எதிர் எதிரே இருப்பது போன்று எப்பொழுதும் வைக்காதீர்கள் அது நமது வீட்டின் செலவுகளை அதிகரித்து வருமானத்தை குறைத்து விடும். அதேபோல் பூஜை அறையில் எப்பொழுதும் உடைந்த கடவுள்களின் சிலைகளை அல்லது கிழிந்த கடவுள்களின் போட்டோக்களை வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கடிகாரம்
நாம் வீட்டில் வைத்திருக்கும் கடிகாரத்தை வடக்கு, கிழக்கு, மேற்கு போன்ற திசைகளில் தான் தொங்கவிட வேண்டும். முக்கியமாக வடக்கு திசையில் உள்ள சுவற்றில் மாற்றுவது மிகவும் நல்லது. எக்காரணம் கொண்டு தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாற்றக்கூடாது அது எமதர்மராஜனின் திசையாகும்.
ஆடை
நாம் வீட்டின் குப்பைகளை தினசரி கூட்டி எடுத்து விட வேண்டும். குப்பைகளை மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் சேர விடக்கூடாது. மேலும் ஒரை ஆடைகளை அடிக்கடி அணியக்கூடாது இது நம் வீட்டில் இருக்கும் செல்வத்தை குறைக்கவும்.
விளக்கு
வீட்டில் எப்போதும் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது குத்து விளக்கை கிழக்கு முகமாகும் உடன் ஏற்றும் துணை விளக்கை வடக்கு முகமாகவும் பார்த்தவாறு விளக்குகள் ஏற்றுங்கள்.
வாழைப் பூ
வாழை பூவை அனைவரின் பார்வை படும்படி வீட்டின் முன்பு அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் முன்பாகவோ கட்டி தொங்க விட வேண்டும். வாரம் ஒரு முறை இந்த வாழைப் பூவை மாற்றி வந்தால் கண் திருஷ்டியில் இருந்து உங்களையும் உங்கள் வீட்டையும் காத்து செல்வ வளங்களை பெருக்கும்
கண்ணாடி
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்குமாறு வையுங்கள்.
மகா லட்சுமி
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் தாமரை மலர் போட்ட லட்சுமி கோலத்தை போட்டு அதன் நடுவே 5 முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதனால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
பணப்பெட்டி
நீங்கள் வீட்டிலேயே அல்லது தொழில் பார்க்கும் இடத்திலேயே பணம் வைத்திருக்கும் பெட்டியில் நல்ல நறுமணம் வீசும்படியான பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக பணப்பெட்டியில் மல்லிகை பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வேலை போன்றவற்றை காலை சூரிய உதய நேரத்தில் வைத்தால் உங்களுக்கு பனவரவு அதிகரிக்கும்.
முன் வாசல்
வீட்டின் வாசல் படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் நமக்கு வரும் அதிர்ஷ்டத்தையும் தடுத்து விடும்.