இந்த உலகில் நாட்கள் செல்ல செல்ல நம்முடைய வருமானம் உயர்கிறதோ இல்லையா நம்முடைய பண தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு பொருட்களை விலையும் சமீப காலமாக உயர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு பக்கம் இருந்தால் நமக்கு வரும் வருமானத்தை விட நாம் செய்யும் செலவுகள் அதிகமாக உள்ளன. நாமும் பணம் கையில் சேர எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணமானது நம் கையில் சேருவதே கிடையாது. அதனால் பண வரவுக்காக நம் வீட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் நம் வீட்டின் பொருளாதார நிலையை மாற்றலாம். அப்படி நாம் செய்யும் மாற்றங்கள் நாம் வீட்டிற்கு பணத்தை ஈர்த்து கொடுக்கும். அது என்னென்ன என்பதை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பி நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
மணி பிளான்ட்
பொதுவாக நாம் வீட்டில் பணம் வரவை அதிகரிப்பதற்காகவும் நம் வீட்டின் செல்வம் வளம் பெருகுவதற்காகவும் வாஸ்து சாஸ்திரப்படி சில செடிகளை நம் வீட்டில் வளர்க்க சொல்லி இருப்பார்கள். அதிலும் குறிப்பாக துளசி, செம்பருத்தி, மல்லி, மருதாணி போன்ற செடிகளை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் போது அது பணத்தை ஈர்த்து நம் வீட்டின் செல்வ வளத்தை பெருக்கும் மேலும் நம் வீட்டிற்கும் ஒரு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். அதே போல் நம் வீட்டிற்கு பணம் வரவை அதிகரிக்க வைக்கும் மற்றொரு செடி மணி பிளான்ட் இப்போதெல்லாம் பல வீடுகளிலும் அழகுக்காக மணி பிளாண்ட் செடி வளர்க்கப்படுகிறது. அதை எப்படி முறையாக வளர்ப்பது, எங்கு வைப்பது என்பதை பார்க்காமல் வாருங்கள்.
மணி பிளாண்ட் பரிகாரம்
அப்படி நம் வீட்டின் பண வரவை அதிகரிக்க வைக்கும் இந்த மணி பிளாண்ட் செடி பரிகாரத்தை நம் வீட்டில் சமையல் அறையில் தான் செய்ய வேண்டும். நம்முடைய வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் சமையலறைகள் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைந்திருக்கும். அப்படி கிழக்கு திசையை பார்த்தவாறு அமைந்திருக்கும் சமையலறையில் நம்முடைய வலது பக்கத்தில் எப்போதும் உப்பு வைத்திருக்கும் பாத்திரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும் மேலும் உப்பை என்றும் தீரவும் விடக்கூடாது தீர்ந்து போவதற்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை காலை நேரம் ஒரு 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் சுக்கிர ஒரையில் செய்ய வேண்டும். அப்படி இந்த பரிகாரத்தை செய்யும் போது நாம் வைத்திருக்கும் கல் உப்பு பாத்திரத்தில் உப்பு முழுவதுமாக நிறைந்து வைத்திருக்க வேண்டும். இப்படி செய்யும் போது நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதன்பிறகு ஒரு கண்ணாடி குடுவை எடுத்து அதில் ஆறு இலைகள் மட்டும் இருக்குமாறு ஒரு மணி பிளான் செடியை வாங்கி வந்து வளர்க்க வேண்டும். பொதுவாக மணி பிளாண்ட் செடியை அடுத்தவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்து வளர்க்கலாம் அல்லது திருடி கொண்டு வந்து வளர்க்கலாம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த பரிகாரத்திற்கு நீங்கள் கடையில் இருந்துதான் பணம் கொடுத்து வாங்கி வர வேண்டும்.
கற்பூர ஆராதனை
இப்படி நம் கண்ணாடி குடுவையில் மணி பிளான் செடியை வைத்து அதை நம் வீட்டு சமையலறையில் இருக்கும் உப்பின் அருகில் தான் வைக்க வேண்டும். பின் வெள்ளிக்கிழமை காலை நீங்கள் வீட்டில் எப்பொழுது போல் பூஜை செய்வது போல் செய்து பின் உங்கள் பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு கற்பூர ஆராதனை காண்பித்த பின்பு அப்படியே நாம் வைத்திருக்கும் மணி பிளான்ட் செடிக்கும் கற்பூர ஆராதனை காட்டி தொடர்ந்து பூஜை செய்து வர வேண்டும்.
பண வரவை அதிகரிக்கும்
இப்படி இந்த மணி பிளான்ட் செடி நம் சமையல் அறையில் எந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ அந்த அளவிற்கு நமது வீட்டிலும் செல்வ வளம் அதிகரித்து நம் வீட்டில் பணப்புழக்கம் என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்த மணி பிளாண்ட் செடி நன்கு வளர்ந்து கொண்டே இருக்கும்போதே உங்களது வீட்டின் பொருளாதார நிலையும் உயர்ந்து கொண்டிருப்பது நீங்களே உணர தொடங்கி விடுவீர்கள். அந்த அளவிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த மணி பிளாண்ட் செடிக்கு உண்டு. அதனால் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.