உங்கள் வீட்டில் பண மழை கொட்ட வேண்டுமா ? வடகிழக்கு மூலையில் இந்த ஒரு பொருளை மறைத்து

- Advertisement -

நம் வீட்டில் பண மழை பெய்ய வேண்டும், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு பலரது ஆசையாக இருக்கின்றது. செல்வம் சேர வேண்டும் என்றால் முதலில் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும், உழைப்பதன் மூலமாக மட்டுமே நாம் செல்வத்தை ஈட்ட முடியும். ஆனாலும் ஒரு சிலர் மிகவும் கடினமாக உழைப்பார்கள் ஏன் வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணமும், செல்வமும் தங்குவதில்லை அப்படிப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 9.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்தால் இனி உங்கள் வீட்டில் பணமழை தான்.அதனால் இன்று இந்த பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் உங்கள் பூஜை அறையை சுத்தப்படுத்தி பூஜை செய்வதற்கான அனைத்து விஷயங்களையும் தயார் செய்து முடித்துவிட்டு. ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது வெள்ளி கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் அரிசி, சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களை சம அளவு கலந்து நிரப்பிக் கொள்ளுங்கள். பின்பு அதில் ஒரு குத்தூசியை எடுத்துக் கொண்டு மேல் நோக்கியவாறு குத்தி வைத்துக் கொள்ளுங்கள். பின் தெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கிண்ணத்தை கையில் வைத்து கொண்டு உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து உங்களது பிரார்த்தனை கூறி. எங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டும் பணம் கையில் தங்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வடகிழக்கு மூலை

பின்பு பூஜை முடிந்தவுடன் நாம் வைத்திருக்கும் கிண்ணத்தை உங்களது வீட்டில் மறைவாக இருக்கும் மூலை பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் நீங்க வைக்கின்ற மூலை தென்மேற்கு மூலையா அல்லது வடகிழக்கு மூலையாக இருந்தால் இந்த பரிகாரத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் இன்னும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை நீங்கள் வாரம் வெள்ளிக்கிழமைகளில் கூட செய்யலாம் அல்லது தினசரி கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இதனால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதை நீங்களே ஆரம்பித்து விடுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here