தீர்க்க முடியாத கடனை கூட தீர்க்க வேண்டுமா ? செவ்வாய்க்கிழமை இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

இக்காலகட்டத்தில் கடன் என்ற சொல்லை கேளாதோர் யாரும் இல்லை ஏன் நம்மில் பலரும் கடன் என்ற பிடியில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என்னதான் நீ கடனை அடைப்பதற்கு நாம் பாடுபட்டாலும் நம் நேரமோ காலமோ அதற்கு வழி விடுவதில்லை.

-விளம்பரம்-

இன்றைய கால மக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். ஒரு மனிதன் எப்பேர்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் கூட கடன் என்ற அரக்கனிடம் சிக்காமல் இருந்தாலே போதும் வாழ்க்கை சுமூகமாக மாறி விடும். பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை உருவாகிறது என்றால் அது பணம் தொடர்பான விஷயமாகத் தான் இருக்கும். அதுவும் இந்த கடனினால் இருக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி கடன் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த எளிய முருகன் வழிபாட்டை செய்தால் கடன் தொல்லை இல்லாமல் வாழலாம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் முருகப்பெருமான் :

இந்த வழிபாட்டினை நாம் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். பொதுவாக நம்மில் பலரிடம் ஒரு நம்பிக்கை உள்ளது எந்த ஒரு புதிய காரியத்தையும் தொடங்கக்கூடாது என்ற ஒன்று. ஆனால் இந்த வழிபாட்டினை நாம் செவ்வாய்க்கிழமை அன்று செய்தோமானால் தீராத கடனையும் அடைத்து விடலாம் என்று சொல்லப்படுகிறது.

இவ்வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக முருகனுக்கு நெய்வேதியமாக அவருக்கு பிடித்த பச்சை பயிறு மற்றும் வெல்லம் சேர்த்த பாயாசத்தை பிரசாதமாக வைக்க வேண்டும். நாம் எந்த தெய்வத்தையும் வழிபடுவதற்கு முன்னர் அவர்களுக்கு பிடித்த உணவினை நெய்வேதியமாக வைத்து வழிபட்டால் நாம் வேண்டியயாவும் விரைவில் நடக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

கடவுளுக்கு பிடித்த நெய்வேதியம் :

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை அன்று இந்த பாயாசத்தை செய்து உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள முருகர் சந்நிதியில் முருகர் பாதத்தில் இந்த பாயாசத்தை வைத்து வழிபடுங்கள். பின் இந்த பாயாசத்தை உங்கள் கையினால் மற்றவர்களுக்கு பிரசாதமாக அளித்து விடுங்கள். பின்னர் கோயிலுள் குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து உங்கள் குறைகளை அல்லது உங்கள் வேண்டுதலை முருகன் முன் வைத்து மனதார வழிபடுங்கள். கடன் பிரச்சினை தவிர உங்களுக்கு வேறு ஏதும் பிரச்சனைகள் இருந்தால் அதனையும் முருகன் முன் வைத்துவிட்டு செல்லுங்கள்.

-விளம்பரம்-

கோ தானம் :

செவ்வாய்க்கிழமைகளில் பசு மாட்டிற்கு பச்சை பயிறு அல்லது பாசிப்பருப்பில் வெல்லம் கலந்து ஏதாவது ஒரு உணவு செய்து உங்கள் கைகளால் பசு மாட்டிற்கு தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு கோ தானம் செய்வதும் கூட நம்மளை நமது கடன் பிரச்சனையில் இருந்து காக்க உதவும் என நம்பப்படுகிறது.

நம்முடைய குறைகளை கேட்டு தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் தான் இந்த முருக கடவுள். உங்களுடைய கடலளவு கடன் சுமையையும் இவரிடம் முறையிட்டு வேண்டினால் அது அடைவதற்கான வாய்ப்பினை உங்களுக்கு விரைவில் உருவாக்கித் தந்து வாழ்நாளில் கடன் என்ற சுமை இல்லாமல் உங்களை நிம்மதியாக வாழவும் வழி காட்டுவார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் உள்ள கடன் அடைவதற்கான முருகர் வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு செய்து பலன் அடையுங்கள்.

-விளம்பரம்-