வீட்டில் உண்மையாக பணம் மழையாக கொட்ட வேண்டுமா ? இந்த ஒரு செடி இருந்தால் மட்டும் போதும்!!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் என்னதான் பணமும் காசும் நம்மிடம் இருந்தாலும் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருப்பதில்லை. நாம் நிம்மதியாக வாழ்வதற்கு தான் பணம் காசை சேர்க்கின்றோம். ஆனால் அது எவ்வளவு தான் இருந்தும் மகிழ்ச்சி மட்டும் நம்மிடம் இல்லை. இத்தனை செய்தும் நம்மிடம் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்றால் நாம் சேர்த்து வைத்த சொத்து சுகங்கள் அனைத்தும் வீண் அதுமட்டுமல்லாமல் நம் வாழ்க்கையை போராட்டமாக மாறிவிடும்.

-விளம்பரம்-

இந்த காலகட்டத்தில் இந்த சூழ்நிலையில்தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் மாறி நம் வீட்டில் சந்தோஷம் பொங்கிட ஆன்மீகம் நமக்கு நிறைய பரிகாரங்களை சொல்லி உள்ளது. அதில் ஒன்றான நாயுருவி செடி பரிகாரம் பற்றி இப்ப பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பரிகாரம் :

நாயுருவி செடி செடி வைத்தியத்திற்கு மட்டுமில்லாமல் ஆன்மீகத்திற்கும் பயன்படுகிறது. நாயுருவி வேரை முறையாக பயன்படுத்தி பரிகாரம் செய்தால் பணவரவை அள்ளித் தரக்கூடிய வல்லமையும் பெற்றது. இவ்வேரை முறையாக பூஜித்து வைத்துக் கொண்டால் சகல சௌபாக்கியத்தையும் அள்ளித்தரும். அது மட்டுமல்லாமல் வீட்டில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும். இந்த நாயுருவிச் செடியை எப்படி பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதனை பற்றி பார்க்கலாம்.

பரிகாரம் செய்யும் முறை :

இந்த செடியை வாங்கும் தினத்தில் சூரிய ஓரை இருக்கும் நேரத்தில் இதை நீங்கள் பணம் கொடுத்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். இப்படி வாங்கி வந்த இந்த செடியை வீட்டில் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும் இந்த திசையும் மிகவும் முக்கியம் அதையும் கவனமாக பார்த்து வைத்து விடுங்கள். இதை வீட்டில் வைத்த உடன் கொஞ்சம் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து விட்டு நீங்கள் எப்போதும் போல இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வாருங்கள்.

இதனையும் படியுங்கள் :உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்குவதற்கு இந்த இந்த பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்!

-விளம்பரம்-

இந்தச் செடி எப்படி தழைத்து வளர்கிறதோ அது போல் உங்கள் குடும்பத்திலும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் மறைந்து பணவரவு மற்றும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரித்து நாம் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை அமைத்து தரும் வல்லமை வாய்ந்தது இந்த நாயுருவி. இந்த செடி பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை உடனே வாங்கி உங்கள் வீட்டில் வைத்து மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை பெற்று நிம்மதியாக வாழுங்கள்.