வருமான் இல்லாதவனுக்கு கூட நிலையான வருமானத்தை வர வைக்க வேண்டுமா ? 6 நெல்லிக்காய் உங்களிடம் இருந்தாலன போதும்!

- Advertisement -

ஒரு மனிதனுக்கு பணம் சம்பந்தமாக எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும். அவனுக்கு வருமானம் சரியாக வந்து கொண்டு இருந்தால் போதும் அதை சமாளிக்கும் தைரியமும், பக்குவமும் கூட அவனுக்கு வந்துவிடும். ஆனால் அடுத்த மாதம் வருமானம் வருமா ? வராதா ? என்பது கூட தெரியாமல் சில மனிதர்களின் வாழ்க்கையே இங்கு ஊசலாடிக் கொண்டுதான் இருக்கின்றது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சிலர் பிரபலமான கம்பெனிகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள் அவர்களுக்கு மாதமானால் போதும் சம்பளம் சரியாக கைக்கு வந்து சேரும். ஆனால் சிலர் இது போன்ற கம்பெனிகளில் மார்க்கெட்டிங் வேலை செய்யும் சாதாரண ஒரு தொழிலாளியாக இருப்பார்கள்.

-விளம்பரம்-

இது போன்ற நபர்களுக்கு மாத மாதம் இந்த ஒரு குறிப்பிட்ட வருமானம் சரியாக வரும் என்று சொல்லிவிட முடியாது. ஏன் அவர்கள் விற்பனை செய்யும் பொருள் விற்பனையாவதை பொறுத்து அவர்களின் சம்பளமும் கூட குறைய கைக்கு வரும். இது போன்று ஒரு நிலையில் வருமானத்தை வைத்துக்கொண்டு அவர்களும் எவ்வளவுதான் சமாளிப்பார்கள் இப்படி நிலையில்லாத வருமானத்தை எப்படி நிலையானதாக மாற்றுவது மேலும் எப்போது வேலையில் இருந்து தூக்குவார்கள் என்று பயந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நல்ல ஒரு நிரந்தரமான வேலை கிடைப்பதற்கும் இந்த ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பரிகாரம்

இப்படி நிலையில்லாத உங்கள் வருமானத்தை நிலையாக மாற்றுவதற்கும்: அப்படி வரும் வருமானம் உங்கள் கையில் தங்குவதற்கும் பெரிதாக ஒன்றும் வேண்டாம் உங்கள் கையில் 6 நெல்லிக்காய் இருந்தால் போதும். இந்த ஆறு நெல்லிக்காய்களிலும் அதன் மேல் உள்ள சதைப்பகுதியை வெட்டி எடுத்து விட்டு நெல்லிக்காய் கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி நாம் எடுத்துக் கொண்ட நெல்லிக்காய் கொட்டைகளை வெயிலில் காய வைத்து பின் ஒரு வெள்ளை நிற சதுர துணியை விரித்து அதில் நாம் வைத்திருக்கும் நெல்லிக்காய் கொட்டைகளை சேர்த்து ஒரு முடிச்சாக முடிந்து உங்கள் வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்து விடுங்கள். நீங்கள் இதை சரியாக செய்து வைத்து விட்டால் மட்டும் போதும் நிலையில்லாத உங்கள் வருமானம் நிலையானதாக மாறிவிடும்.

வருடம் ஒரு முறை

மேலும் இப்படி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது கொட்டையை எத்தனை காலங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்ற கேள்வி வரும். நீங்கள் அடிக்கடி இந்த நெல்லிக்காய் கொட்டைகளை மாற்ற வேண்டாம் சாதாரணமாகவே நெல்லிக்காய் கொட்டைகள் கெட்டுப் போவதற்கு ஒரு வருட காலம் தேவைப்படும். அதனால் வருடத்திற்கு ஒருமுறை பழைய நெல்லிக்காய் கொட்டைகளை எடுத்து மனிதர்களின் காலப்படாத இடததில் போட்டுவிட்டு புதிய நெல்லிக்காய் கொட்டைகளை போட்டு முடிந்து கொள்ளுங்கள். சில பரிகாரங்கள் நாம் செய்யும் போது அதற்கு கற்பூர ஆராதனை, ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவை காண்பிக்க வேண்டி இருக்கும் அப்படி ஒன்றும நாம் செய்யத் தேவையில்லை. நெல்லிக்காய் கொட்டைகளை ஒரு வெள்ளை நிற துணியில் முடிச்சாக முடிந்து உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஏதாவது ஒரு பகுதியில் வைத்து விட்டாலே போதுமானதாக இருக்கும்.

சுக்கிர யோகமும் சேர்த்து கிடைக்க

அதே நேரத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்தவுடன் உங்கள் கைக்கு அவ்வளவு சீக்கிரமாக நிரந்தரமான வருமானமும், அதிர்ஷ்டமும் சேர்ந்து கிடைக்கும் என சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் சொல்லப்பட்டு இரூக்கிறது. அது மட்டுமல்லாமல் காலையில் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்பவர்களுக்கு ஜோதிடம் ரீதியான ஒரு யோகம் இருக்கிறது. ஆம் தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுபவர்களுக்கு சுக்கிர அதிர்ஷ்டம் மற்றும் புதன் பகவானின் பரிபூரண அருளும் முழுமையாக கிடைக்கும். அதனால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசிக்கொண்டே தான் இருக்கும்.

-விளம்பரம்-

மகாலட்சுமி நெல்லி விருச்சகம்

ஏன் நெல்லிக்காயை வைத்து இந்த பரிகாரம் செய்கின்றான் தெரியுமா ? இந்த நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் கொட்டை பெருமாளின் அம்சமாக விளங்கக்கூடியது மேலும் நெல்லிக்காய் விருச்சகமே மகாலட்சுமி உள்ளங்கையில் இருந்து உருவாகக் கூடியது. அதனால் மேலே சொன்ன படி பரிகாரங்களை செய்து முடித்துவிட்டு அப்படியே இல்லாமல் உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்க உங்களால் என்ன செய்ய முடியுமோ அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்கும் போது அதற்கு தடையாக வரும் அனைத்து விஷயங்களையும் இந்த பரிகாரம் தவிடு பொடியாக்கி விடும். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.