கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்!

- Advertisement -

இன்றைய நாட்களில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. அந்த பணம் நமக்கு வராமல் கூட இருந்து விடலாம் ஆனால் அதை காட்டிலும் அந்த பணம் நம்மிடம் வந்து எப்படி போகிறது, எங்கு செலவாகிறது என்பதே தெரியாமல் போவது இன்னும் கொடுமையான ஒன்று. ஆம் இன்றைய நாட்களில் பலருக்கு இதுதான் நிலைமை ஒரு சிலருக்கு அவர்களுக்கு வரும் வருமானத்தை விட அவர்கள் குடும்பத்திற்காக செய்யும் செலவுகள் அதிகமாக உள்ளது. இது பத்தாது என்று அனாவசியமான வீண் செலவுகள் பல இருக்கும் இதுபோன்ற வீண் செலவுக்காக உங்கள் பணம் செலவாவதை தவிர்த்து, உங்கள் வீட்டில் பணம் சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பரிகாரத்திற்கு தேவையானவை

இப்படி உங்களுக்கு வரும் வருமானம் எப்படி போகிறது என்று தெரியாமல் நீங்களும் தவித்துக் கொண்டிருக்கும் நபரா ? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான் அந்த பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். பணம் வீண் விரயமாகாமல் இருப்பதற்காக நாம் செய்யப்போகிறாஇந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு சிறிய கர்ச்சீப் அளிவில் இருக்கும் சிவப்பு நிற துணி மற்றும் மைசூர் பருப்பு சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய இந்த இரண்டு பொருட்களும் முக்கியமாக நமக்கு தேவைப்படும் பொருட்கள்.

- Advertisement -

பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு முதலில் நாம் வைத்திருக்கும் சிவப்பு நிற துணியை விரித்து வைத்து. அதில் நாம் வைத்திருக்கும் மைசூர் பருப்பிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் பயன்படுத்தியதற்கு துணியில் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அமர வைத்து இந்த முடிச்சை வைத்து அவர்களின் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை கடிகார முள் சுற்றுவது போல் சுற்றி போட வேண்டும். இதை 11 முறை நீங்கள் சுற்றிக் கொள்ள வேண்டும் சுற்றும் போது கடிகார முள் சுற்றும் திசையில் சுற்ற வேண்டும்.

மாலை 6.00 க்கு மேல்

இந்த பரிகாரத்தை நீங்கள் மாலை 6 மணிக்கு செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும் ஏனென்றால் பொதுவாக எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதற்காக நாம் செய்யும் கண் திருஷ்டி, கழித்தல் போன்ற பரிகாரங்களை வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு செய்யும்போது அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதனால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்களை அமர வைத்து அவர்களுக்கு இந்த முடிச்சை வைத்து சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். சுற்றிய பின் முடிச்சை உங்கள் வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.

எங்கு போடுவது

இப்படி நாம் உடம்பை சுற்றி வைத்திருக்கும் சிவப்பு நிற முடிச்சை மறுநாள் காலை நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டு கழிவு நீர் குழாயில் போடுவதோ அல்லது வேறு எங்கும் தூக்கி போடவும் கூடாது போடும் , ஒடும் தண்ணீரில் தான் போட வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை செய்யும் போது சிவப்பூ நிற முடிச்சை உடம்பை சுற்றி போட்டவுடன் வெளியேற்றுவது சிறந்ததாக இருக்கும். இல்லை முடியாத பட்சத்தில் வீட்டில் ஒரு மூலையில் வைத்து மறுநாள் போடலாம்.

-விளம்பரம்-

முன்னோர்கள் பயன்படுத்திய முறை

இந்த பரிகாரம் பார்ப்பதற்கு திருஷ்டி கழிப்பு பரிகாரம் போல் இருக்கிறதா ? ஆம் இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வகையான திருஷ்டி கழிப்பு பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை நாம் செய்யும்போது நமது வீட்டில் பணம் சேர விடாமல் தடுக்கும் அல்லது பணத்தை வீண் விரையம் ஆக்கிக் கொண்டிருக்கும் கண் திருஷ்டிகள், கெட்ட சக்திகள், எதிர்மறை சக்திகள் போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் வெளியேறிவிடும். அதனால் உங்கள் வீட்டில் பணப்பழக்கமும் சாதாரணமாக நடக்கும். உங்கள் வீட்டில் வீண் விரயமாகும் பணம், அனாவசியமான செலவு ஆகும் பணம் அனைத்தும் தடுக்கப்பட்டு உங்க வீட்டின் சேமிப்பு பணம் என்பது உயர்ந்து கொண்டே இருக்கும்