- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான ஒன் பாட் வத்தக்குழம்பு சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும். இந்த சாதத்தை நம்ம அவசரத்துக்கு செய்யலாம் அப்படி இல்லன்னா நிறைய நேரம் இருந்தா கூட வேற ஏதாவது வேலை இருக்கு சட்டுனு ஏதாவது செய்யணும் அப்படின்னு நீங்க யோசிச்சா யோசிக்காம இந்த வத்தக்குழம்பு சாதத்தை செஞ்சிடுங்க.
உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் ஆரோக்கியமான இந்த சாதத்தை செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி தான் இந்த வத்தக்குழம்பு சாதம். உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம்.
ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், மற்ற சாதத்தை விட சூப்பராக இருக்கும். பொதுவாக இந்த ரெசிபி சுண்டைக்காய் வத்தல் வைத்து தான் செய்யப்படும். ஆனால் மணத்தக்காளி வத்தல் வைத்து கூட இதை செய்யலாம். இந்த பதிவில் நாம் இரண்டு வத்தலையும் வைத்து சாதம் செய்யப்போகிறோம். அதனால் இந்த சாதம் அற்புதமான சுவையுடன் இருக்கும். இந்த பதிவில் மணமணக்கும் வத்தக்குழம்பு சாதம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
பின் பெருங்காயத்தூள், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி புளி தண்ணீர், வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன்பிறகு அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் விட்டு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் வத்தக்குழம்பு சாதம் தயார்.






