கையில் பத்து காசு இல்லாதவன் கூட சொந்த வீடு வாங்குவான்! நிலைவாசலில் இதை மட்டும் செய்தால்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் படித்து முடித்த எந்த இளைஞர்களிடம் போய் உங்கள் வாழ்க்கையின் கனவு என்றால் என்ன என்று கேட்டால் அதில் முக்கால்வாசி இளைஞர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்டுவது அல்லது வாங்குவது தான் எனது வாழ்க்கையில் கனவு என்று. ஏன் அதுவே அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாகவே எடுத்திருப்பார்கள். ஏனென்றால் வாடகை கொடுத்தும் வாடகை வீட்டில் நினைத்ததை செய்ய முடியாமல் அவர்கள் பறி கொடுத்த சந்தோஷங்கள் எண்ணில் அடங்காதவை. என்னதான் வாடகையாக பணத்தை கொடுத்தாலும் அவர்களுக்கு சுதந்திரம் என்பது இல்லாமல் இருப்பது போன்று இருக்கும் மேலும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடுக்கும் தொல்லைகள் வேறு அதனால் இன்று நாம் சொந்தமாக வீடு வாங்க முடியாது என்ற நினைப்பில் இருப்பவர்கள் கூட சொந்த வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நிலைவாசல் படி

இப்படி உங்களின் பல நாள் கனவாக இருக்கும் சொந்த வீடு வாங்கும் என்ற ஆசை நிறைவேற முதலில் ஒரு பூஜை செய்ய வேண்டும் இந்த பூஜையை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை செய்ய வேண்டி இருக்கும். அதனால் பூஜை செய்வதற்கு முதலில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற முழு எண்ணத்துடன் உங்கள் வீட்டின் நிலை வாசலில் சட்டத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் நிலைவாசலின் கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு சட்டத்திலும் இரண்டு பக்கத்திலும் மஞ்சளை நன்றாக குலைத்து மஞ்சள் பூசி விடுங்கள். பின் அதன் மேல் குங்குமப்பொட்டு வைத்து உங்கள் நிலை வாசலில் இருந்து வாசல் படி வரை அரிசி மாவை வைத்து கோலம் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

நிலைவாசல் பூஜை

கடைசியாக அரிசிமாவை வைத்து கோலம் போட்ட பின்பு உங்கள் வீட்டின் நிலைவாசலின் இரண்டு பக்கத்திலும் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு அகல் விளக்கை ஏற்றி வைத்து உங்கள் நிலைவாசலுக்கு ஊதுபத்தி காண்பித்து, பின் கற்பூர ஆராதனை செய்து பூஜை செய்ய வேண்டும். இப்படி நீங்கள் குடியிருக்கும் வீட்டின் நிலை வாசலுக்கு நாம் செய்யும் இந்த சிறிய பூஜை ஆனது வாடகை வீட்டில் குடியிருக்கும் உங்களை சொந்த வீட்டில் குடியேற்ற அதற்கான யோகத்தை உங்களுக்கு அள்ளித் தரும். நான் இருப்பது சொந்த வீடு நான் இந்த வீட்டில் பூஜை செய்வதால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்கு உங்கள் வீட்டில் மேலும் சுபிட்சம் பெருகி செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும்.

கோவில் நிலைவாசல் படி

இது தவிர சொந்த வீடு வாங்குவதற்கு வேறு ஒரு வழியும் உள்ளது நாம் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கும் ஏதாவது ஒரு கோவில் சென்று அந்த கோவிலில் இருக்கும் ஐயரிடம் அனுமதி பெற்று கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியில் இதே போன்று நிலைவாசல் படியை நன்கு சுத்தம் செய்து அதற்கும் மஞ்சளை குழைத்து இரு பக்கமும் பூசி குங்கும பொட்டு வைத்து, பின் அரிசி மாவில் கோலம் போட்டு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு சொந்த வீடுக்கு வாங்க கூடிய யோகம் இன்னும் அதிகமாகவே கிடைக்கும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் செய்து வரலாம்.

நிலைவாசல் படியே மிதிக்ககூடாது

அதேபோல் நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது கோவிலின் நிலை வாசல்படியை என்றுமே மிதித்து உள்ளே சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அது போல தான் வீட்டின் நிலை வாசல் படியிலும் மிதித்து செல்லக்கூடாது அதன் மேல் நின்று கொண்டு யாரிடமும் பேசவும் கூடாது. அப்படி நிலை வாசல் படியின் மீது நிற்ப்பது, மிதித்து செல்வது அறவே ஆகாத ஒன்று. அதனால் நான் மேலே சொன்ன விஷயங்களையும், இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை எல்லாம் செய்து பாருங்கள் சொந்த வீடு வாங்கவே முடியாது என்று இருப்பவர்கள் கூட சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் கிடைக்கும்.

-விளம்பரம்-