சொந்தமாக வீடு வாங்கவே முடியாது என்பவர்கள் கூட சொந்த வீடு வாங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் படித்து முடித்த எந்த இளைஞர்களிடம் உங்கள் வாழ்க்கையின் கனவு என்றால் என்ன என்று கேட்டால் அது முக்கால்வாசி இளைஞர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்டுவது அல்லது வாங்குவது தான் எனது வாழ்க்கையில் கனவு என்று. ஏன் அதுவே அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாகவே எடுத்திருப்பார்கள். ஏனென்றால் வாடகை கொடுத்தும் வாடகை வீட்டில் நினைத்ததை செய்ய முடியாமல் அவர்கள் பறி கொடுத்த சந்தோஷங்கள் எண்ணில் அடங்காதவை. என்னதான் வாடகையாக பணத்தை கொடுத்தாலும் அவர்களுக்கு சுதந்திரம் என்பது இல்லாமல் இருப்பது போன்று இருக்கும் மேலும் இந்த வீட்டின் உரிமையாளர்கள் கொடுக்கும் தொல்லைகள் வேறு அதனால் இன்று நாம் சொந்தமாக வீடு வாங்க முடியாது என்ற நினைப்பில் இருப்பவர்கள் கூட சொந்த வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

சுக்கிரன் பகவான், செவ்வாய் பகவான்

பலர் சொந்த வீட்டுக்கு குடி போக வேண்டும் என்று ஆசையால் சொந்தமாக வீடு வாங்குவதற்கோ கட்டுவதற்கோ பல முயற்சிகள் எடுப்பார்கள். அப்படி அவர்கள் முயற்சி எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும் அப்படி தடை இல்லாமல் சொந்த வீடு கட்ட வேண்டும் வாங்க வேண்டும் என்று நினைத்தால். அதற்கு சுக்கிர பகவானின் ஆசீர்வாதமும் செவ்வாய் பகவானின் பரிபூரண அருளும் நமக்கு இருக்க வேண்டும். அதனால் இந்த இரண்டு கிரகங்களின் ஆசிர்வாதமும் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

தாந்திரீக பரிகாரம்

இப்படி இந்த இரண்டு கிரகங்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதற்கு தாந்திரீக ரீதியாக நாம் சிறிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய முதலில் செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் செய்ய வேண்டும். இதை செய்வதற்காக நீங்கள் கோடு போடாத ஒரு நோட்டு ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள் அதில் “சொந்தமாக வீடு வாங்கி விட வேண்டும்” என்றும் மற்றும் அதனுடன் “369 321” என்ற எண்ணையும் சேர்த்து 11 முறை தினசரி எழுதிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செவ்வாய் கிழமையில் இருந்து எழுத ஆரம்பிக்கலாம்.

முயற்சியும் எடுக்க வேண்டும்

இப்படி தினமும் நீங்கள் இந்த எண்ணையும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வரியையும் மட்டும் 11 முறை எழுதி வந்தால் விரைவில் உங்களுக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். இப்படி தினசரி இதை மட்டும் எழுதிவிட்டு சும்மா இருக்க கூடாது ஏனென்றால் நீங்கள் சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் இப்படி நீ வீடு வாங்க முயற்சிகள் எடுக்கும் போது அதற்கான யோகத்தை இந்த பரிகாரம் பெற்று தரும் மேலும் அதற்கு இடையில் வரும் தடைகளை தடுத்து தவுடு பொடியாக்கிவிடும்.

பல நாள் கனவு நிறைவேறும்

இதை நீங்கள் எழுதும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுத வேண்டும். அதாவது இப்படி நீங்கள் எழுதுவது வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது. இதை எழுதும் போது நீங்கள் ஒரு தவ நிலையில் அமைதியான இடத்தில் அமர்ந்து எழுத வேண்டும் மேலும் நீங்கள் இதை எழுதும் போது நம்பிக்கை இல்லாமல் எழுத கூடாது நம்பிக்கையில்லாமல் எழுதினாலும் எந்த ஒரு பிரயோஜனமும் கிடைக்காது. எந்த ஒரு காரியத்தையும் முழு நம்பிக்கையுடன் ஆத்மார்த்தமாக செய்யும் பொழுது அது நிறைவேறும் என்பார்கள் அதுபோலத்தான் உங்களின் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற பல நாள் கனவு நிறைவேறும்.

-விளம்பரம்-

பெண்கள் தாரளமாக செய்யலாம்

பெண்களுக்கு இப்போது சில சந்தேக வரும் இந்த பழைய தாந்திரீக பரிகாரத்தை நாங்களும் செய்யலாமா என்று கண்டிப்பாக இந்த தாந்திரீக பரிகாரத்தை ஆண் பெண் இப்படி யார் வேண்டுமானாலும் செய்யலாம் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் கூட இந்த பரிகாரத்தை செய்து வரலாம் இதில் தவறு எதுவும் கிடையாது முழு நம்பிக்கையுடன் இதை நீங்கள் தினசரி எழுதி வரும்போது வாழ்க்கையை நீங்கள் நம்ப முடியாத அதிர்ச்சி உங்களுக்காக காத்திருக்கும் அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here