கையில் பத்து காசு இல்வாதவன் கூட சொந்த வீடு வாங்க வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

ஒரு சிலரிடம் உங்களின் வாழ்நாள் கனவு என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளை கூறுவார்கள். ஆனால் சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிறுவயதில் இருந்து வசித்து வரும் மக்களிடம் உங்களுடைய வாழ்நாள் கனவு என்னவென்று அவர்களிடம் போய் கேட்டால். 100ல் 90 சதவீத நபர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது தான் என் கனவு என்று. அவர்களின் வாழ்க்கையின் இலட்சியமாகவே அதான் இருக்கும். அந்த அளவிற்கு சொந்த வீடு இல்லாமல் அவர்கள் பட்ட துயரத்தை விவரிக்கவே முடியாது. அதனால் சொந்த வீடு இல்லாதவர்கள் வேகமாக நிலம் அல்லது வீடோ வாங்க கூடிய யோகம் கை கூடி வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

செவ்வாயின் அருள், அசீர்வாதம்

அதனால் நமது வாழ்க்கை இலட்சியமான நமக்கென்று சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக செவ்வாய் கிரகத்தின் அருளும், ஆசீர்வாதவும் இருக்க வேண்டும். இது மட்டும் போதாது இதனுடன் நாம் முருகப் பெருமானே சேர்த்து வழிபடும் போதுதான் நமக்கு சொந்த வீடு வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ யோகம் கை கூடி வரும். அதனால் இந்த இரண்டுமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் செவ்வாய்க்கிழமையில் முருகப் பெருமானை எப்படி வழிபடுவது, என்ன செய்ய வேண்டும்? என்பதனை நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

- Advertisement -

திருச்செந்தூர்

இப்படி நமக்கு வீடு வாங்கக்கூடிய யோகம் கைகூடி வருவதற்கு செவ்வாயில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒரு வீடுக்கு செல்ல வேண்டும் அது என்னவென்றால் திருச்செந்தூர். ஆம் உங்களுக்கு வீடு வாங்கக்கூடிய யோகம் கைகூடி வரவேண்டும் என்றால் நீங்கள் ஒரு முறை திருச்செந்தூர் சென்று அங்குள்ள செந்தில் ஆண்டவரை வணங்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அப்படி நீங்கள் திருச்செந்தூர் சென்று கோவிலுக்குள் சென்றது முதல் முருகப்பெருமானை நீங்கள் தரிசிக்கும் வரை ஒவ்வொரு நொடியும் சரவணபவ என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் முருகப்பெருமானை தரிசித்து விட்டு உடனடியாக வீடு திரும்பக் கூடாது கோவிலுக்கு உள்ளயே ஒரு ஆறு மணி நேரங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்.

கடல் நீர்

அதன் பின்பு திருச்செந்தூரில் இருந்து வீடு திரும்பு முன் கடற்கரைக்கு சென்று அங்கு இருந்து ஒரு பாட்டிலில் தண்ணீரை, வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த தண்ணீரை வீட்டிற்கு கொண்டு வந்து, இதனுடன் மஞ்சள் கலந்து நீங்கள் வீடு கட்டலாம் என வைத்திருந்தால் அந்த நிலத்தில் தெளித்து விடுங்கள் அல்லது வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் பாதியில் நிற்கிறது என்றால் அங்கு தெளித்து விடலாம் அல்லது இனிமேல் தான் நிலம் வாங்க வேண்டும் வீடு கட்ட வேண்டும் என்று இருப்பார்கள் நீங்கள் இருக்கும் வீட்டிலேயே தெளித்து விடுங்கள். இதை ஆறு வாரம் செவ்வாய் கிழமை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆறு வாரம் என்பதால் நீங்கள் தண்ணீரை அதிகமாக எடுத்து வந்து பக்குவமாக பயன்படுத்த வேண்டும்.

திருச்செந்தூர் போக முடியாதவர்கள்

ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் இருந்தே வழிபடலாம் அதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை என்று காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு எப்போதும் போல் பூஜை அறையை தயார்படுத்தி முருகர் படத்திற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து பின் வாசனை திரவியம், அரளிப்பூ இவையெல்லாம் வைத்து முருகரை வழிபட்டு வர வேண்டும். உங்கள் வீட்டில் முருகப்பெருமானின் வேல் இருந்தால் அதை சிறிது பச்சரிசியை கொட்டி அதில் நட்டு வைத்து வேலுக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து 108 முறை சரவண பவ என்ற நாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இப்படி வழிபடுபவர்களுக்கும் சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் கைகூடிவரும்.

-விளம்பரம்-

வீடி கட்டும் யோகம் கைகூடி வரும்

அதனால் தங்களின் வாழ்க்கை லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் கெட்ட விடும் என்று நினைப்பார்கள் யாராக இருந்தாலும் முதலில் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை வழிபட்டு பின் அங்கிருந்து கடல் நீர் கொண்டு வந்து வீட்டில் மஞ்சள் மஞ்சள் கலத்து செவ்வாய்க்கிழமை அன்று தெளித்து ஆறு வாரம் இதை செய்து வாருங்கள். போக முடியாதவர்கள் மேலே சொன்னது போல் செவ்வாய்க்கிழமை இது போல் முருகப்பெருமானே தவறாத வழிபட்டு வாருங்கள் உங்களின் சொந்த வீடு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் வேகமாக நிறைவேறுவதற்கு முருக பெருமான் மற்றும் செவ்வாயினும் அருளும் ஆசிர்வாதமும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here