கற்பூரத்துடன் இந்த 3 பொருளை சேர்த்து வைத்தால் வீட்டில் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். நம் பர்சில் பல பொருட்கள் இருக்கலாம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-

அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய தேவை ஆனது சிலருக்கு அளவுக்கு அதிகமாக ஏற்படும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. பணம் அதிகம் சேர நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தைப் பார்க்கலாம்.

- Advertisement -

பணம் சேர பச்சை கற்பூரம்

எந்த வீட்டினுள் நுழைந்ததும், துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ, நறுமணம் கமழுகிறதோ, அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவே நமது வீட்டிற்குள் நறுமணம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சை கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலே பணவரவை அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஏலக்காய் தாந்திரீகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. இது பண வசியம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் இருக்கும் இடங்களில் பணத்திற்கு குறை இருக்காது என்கிற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு 7 கிராம்பு, 7 நிறம் மாற ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் 7 பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் இந்த பொருட்களை வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து மணதார வேண்டிக் கொள்ளுங்கள். பின் இதனை உங்கள் வீட்டின் பீரோ அல்லது பூஜையறையில் வைத்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை எந்த நாளிலும் செய்யலாம் ஆனால், இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் தொடங்க வேண்டும். நீங்கள் மூட்டை கட்டி வைத்திருக்கும் பொருட்களின் வாசனை போனவுடன் இதனை போன்ற இன்னொரு மூட்டையை செய்து வைத்து விடுங்கள். பழைய மூட்டையில் இருந்த பொருட்களை தண்ணீரில் விடாமல் உங்கள் சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

-விளம்பரம்-

பர்ஸில் வையுங்கள்

பச்சை கற்பூரம் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்தால் நாம் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

இந்த பரிகாரத்தை செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

-விளம்பரம்-