உங்கள் பண கஷ்டம் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வேண்டுமா ? இந்த மூன்று சிலைகள் வீட்டில் இருந்தால் போதும்!

- Advertisement -

பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினையாக தான் இருக்கும். நிறைய பேர் நமக்கு சொல்லுவார்கள் தினமும் இந்த வாழ்க்கையுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று ஆனால் உண்மையில் நாம் இந்த வாழ்க்கையுடன் போராடவில்லை இந்த பணத்துடன் தான் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் பண கஷ்டம், பண பற்றாகுறையால் அவதிப்படும் உங்களது வீட்டுக்கு பண வரவு அதிகரிக்க வேண்டுமா ? அப்போது உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த மூன்று சிலைகளை மட்டும் வாங்கி வையுங்கள் அது போதும் உங்கள் வீட்டில் பண வரவை அதிகரித்து செல்ல செழிப்புடன் வாழ்வீர்கள். அது என்னென்ன சிலைகள்கள் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

மர விநாயகர்

உங்கள் வீட்டில் மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அந்த விநாயகர் சிலை ஆலமரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்தால் மிகவும் நல்லது. இப்படி மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் உள்ள பண பிரச்சனைகள் நீங்கி உங்கள் வீட்டில் சந்தோசமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

- Advertisement -

மஞ்சள் விநாயகர் சிலை

மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பது கூட நல்லது. இப்படி இந்த விநாயகர் சிலையை வாங்கி வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் மேலும் உங்கள் வீட்டிற்கு மங்களத்தை உண்டாக்கும். சாதாரணமாக வீட்டில் இருக்கும் மஞ்சளை நீர் கலந்து விநாயகர் சிலை செய்து கூட பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இந்த விநாயகர் சிலை பூஜை அறையில் வைப்பதன் மூலமாக கூட பண பிரச்சனைகள் நீங்கி உங்கள் வீட்டிற்கு பணவரவை அதிகரிக்கும் வைக்கும்.

சிவன் சிலை

பலரும் சிவபெருமானை அழிக்கும் கடவுள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை நீங்கள் உங்கள் பூஜை அறையில் சிவன் சிலையை தாரளமாக வாங்கி வைக்கலாம். ஆனால் ஒரே ஒரு சிவன் சிலை மட்டும்தான் இருக்க வேண்டும் அதற்கு அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைக்கு அதுவே கூட காரணமாக மாறிவிடும். இப்படி சிவன் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டங்கள் நீங்கி வறுமையில் இருந்து விடுபடுவீர்கள்.

ஆனால் உங்கள் வீட்டில் சிவன் சிலை வைப்பதாக இருந்தால் அந்த சிலை சிவபெருமான் தியானம் செய்வது போன்று அல்லது அமைதியாக அமர்ந்திருப்பது போன்று தான் இருக்க வேண்டும் நடனம் ஆடுவது போன்ற சிலையாக இருக்கக் கூடாது. அது வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் மேலும் வீட்டில் நடராஜர் சிலை வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் அது வீட்டில் இருப்பார்களின் கோபத்தை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here