பணம் கையில் தாராளமாக புரலும் கையில் வெறும் வால் மிளகு இருந்தால் மட்டும் பொதும்!

- Advertisement -

பண பிரச்சினை பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அன்றாட பிரச்சினை ஆகும். பணத்தை சம்பாதிக்க நாம் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டுருக்கிறோம். இப்படி சம்பாதித்தால் மட்டும் பணம் தங்கி விடுவதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் தேவை இல்லாமல் வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே கையில் பணம் சேரும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

-விளம்பரம்-

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவ சித்தனும் கூட பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போய் விட்டார். பொருளோடு இருந்தால்தான் இந்த உலகம் நம்மை மதிக்கிறது. லட்சங்களில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்டேன் என்கிறது என்பவர்களும் கடன் வாங்கும் சந்தர்ப்பத்திற்கு ஆளாகி அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு அடுத்து குறிப்பிட போகும் சில எளிய பரிகாரங்கள் நிச்சயம் உதவும்.

- Advertisement -

நாககேசர்

நாககேசர் என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால் வால் மிளகு என்றால் அனைவரும் அறிந்ததே. ஆமாம் நாககேசர் என்று ‌அழைப்பது வால் மிளகை தான். வால் மிளகு உடல் நிலை குறைபாட்டை சரி செய்வதில் சிறப்பு வாய்ந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதாவது உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் இந்த வால் மிளகை உடைத்து ரசம் வைத்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை தீர்ந்து விடும். உடல் நிலை குறைபாடு மட்டுமில்லை கடன் பிரச்சனை, தங்கம் சேர, பதவி உயர்வு கிடைக்க இந்த வால் மிளகை வைத்து பரிகாரம் செய்தால் அதற்கான பலனை காணலாம்.

பரிகாரம் செய்யும் முறை

பரிகாரம் செய்வதற்கு நமக்கு நான்கே பொருட்கள் தான் தேவை. அது வால் மிளகு, கொண்டை கடலை, கோதுமை மற்றும் துளசி. வீட்டில் இருக்கும் கொண்டைக்கடலை மற்றும் கோதுமையை இந்த பரிகாரம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது வெளியில் இருந்து புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். துளசியை 11 என்ற எண்ணிகையில் திங்கட்கிழமை அன்று பிடுங்கி வீட்டு நிழலில் காய வைத்துக் கொள்ளுங்கள். இதையெல்லாம் சேர்த்து எந்த நாளில் எந்த நேரத்தில் அரைக்கிறோம் என்பதில் தான் விடயமே உள்ளது.

கோதுமை இரண்டரை கிலோ எடுத்துள்ளீர்கள் என்றால் கொண்டைக்கடலை 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் காய வைத்துள்ள துளசி மற்றும் இரண்டு வால்மிளகு இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து சனிக்கிழமையன்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதனை ஒரு பாட்டிலில் போட்டு உங்கள் சமையலறையில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் இந்த பரிகாரமே. இந்த பரிகாரத்திற்கு நாம் எடுத்திருக்கும் பொருளும் இதனை அரைக்கும் நாளும் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது.

-விளம்பரம்-

நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். சூரியனுக்கு பிடித்த தானியம் கோதுமை. கொண்டக்கடலை குரு பகவானுக்கு உகந்த ஒன்றாக கருதப்படுகிறது. துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, துளசி செடியில் லட்சுமி தேவி குடியிருக்கிறாள். இவற்றுடன் சிவ‌பெருமானுக்கு உகந்த வால் மிளகு, இப்படி தெய்வங்களுக்கு உரிய பொருள்களை ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கும் பொழுது பண‌வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து பிரச்சனைகளும் சுலபமாக, விரைவில் தீர்ந்து நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக உள்ளது. இந்த எளிய பரிகாரங்களை முழு மனதுடன் நம்பிக்கையுடன் செய்து வந்தாலே நம்முடைய பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இதனையும் படியுங்கள் : பர்சில் பணம் நிரம்பி வழிய இந்த ஒரு பொருளை பர்சில் வையுங்கள் போதும்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

-விளம்பரம்-