பர்சில் பணம் நிரம்பி வழிய இந்த ஒரு பொருளை பர்சில் வையுங்கள் போதும்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் அதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நம் வாழ்வில் பெரும் பங்கு பணத்திற்கு உள்ளது. இக்காலகட்டத்தில் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பது பணமாகவே உள்ளது. இவ்வுலகமே பணத்தின் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறது, அதை குவியலாக சேர்ப்பதற்கு நாம் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குத்தான் ஆன்மீகத்தில் ஒரு பரிகாரத்தை கூறியிருக்கிறார்கள். அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

-விளம்பரம்-

சில நேர்மறை ஆற்றல்களைக் கொண்ட பொருட்களை நம் பரிசில் வைக்கும் பொழுது அது நமக்கு பணவரவை அதிகரித்து கொடுக்கிறது. இந்த நேர்மறை ஆற்றல் கொண்ட பொருட்களை பரிசில் வைத்தால் நமக்கு பொருளாதார பிரச்சினை வராது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

லட்சுமி தாயாரின் புகைப்படம்

லட்சுமி தாயின் புகைப்படத்தை பர்சிலோ அல்லது பணப்பையிலோ வைப்பது பணவரவை அதிகரிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் அப்புகைப்படம் பணத்தை சேமிக்கும் எண்ணம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.

ஆசைகள் எழுதிய காகிதம்

ஒரு சிவப்புத் தாளில் உங்கள் விருப்பங்களை எழுதி, அதை ஒரு சிவப்பு பட்டு நூலால் கட்டி, அந்த காகிதத்தை நீங்கள் பணத்தை வைத்திருக்கும் பெட்டகத்தில் வைக்கவும் அல்லது காகிதத்தை உங்கள் பணப்பையில் வைக்கவும், இதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும்.

அரிசி

செல்வம் மற்றும் நல்வாழ்க்கையை அரிசி குறிக்கிறது. நமது பர்சில் ஒரு சில அரிசி தானியங்களை வைக்கும் பொழுது, அது நேர்மறை ஆற்றலை அதிகரித்து நமக்கு பணவரவை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

-விளம்பரம்-

பரிசாக பெறப்பட்ட பணம்

உங்கள் பெற்றோர் அல்லது பெரியவர்களிடமிருந்து வெகுமதியாகப் பெற்ற பணத்தை உங்கள் பணப்பையில் வைத்திருப்பது உங்களை நோக்கி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். இந்த பணத்தை ஒருபோதும் செலவு செய்துவிடக்கூடாது.

ஸ்ரீ யந்திரம்

இந்த ஸ்ரீ யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் புனிதமான பொருள்கள் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை நமது பர்ஸிலோ அல்லது பணப்பையிலோ வைத்தால் அது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் பணவரவையும் ஈட்டி கொடுக்கும்.

தாமரை விதைகள்

தாமரை மலர் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது மற்றும் தாமரை விதைகள் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகின்றன. நீண்ட கால நிதி ஆதாயத்திற்காக சில தாமரை விதைகளை உங்கள் பணப்பையில் அல்லது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

அரச மர இலை

அரச மரம் ஒரு புனிதமான மரமாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு புதிய அரசமர இலையை வைத்திருப்பது ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். இந்த இலையை வைக்கும் முன் இலையை நன்றாக கழுவி இலையில் குங்குமப்பூவால் ‘ஸ்ரீ’ என்று எழுத வேண்டும்.

வெள்ளி நாணயம்

உங்களிடம் வெள்ளி நாணயம் இருந்தால் அதனை உங்கள் பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் பரிசில் வைப்பதற்கு முன்னர் லட்சுமி புகைப்படத்தின் முன்னர் வைத்து வழிபட்டு பின்னர் அதனை உங்கள் பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு பணத்தடைகள் நீங்கும்.