வீட்டில் பணம்‌ பல மடங்கு பெருக, எப்பேர்ப்பட்ட கடனும் தீர வெறுமா ஒரு ரூபாய் கையில் இருந்தால் போதும்!

- Advertisement -

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. இந்த உலகில் வாழும் எல்லாம் மனிதர்களுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதே பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது தான், என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நின்று விடுவோம். இது மாதிரியான குழப்பமான மனநிலையில் இறைவன் தவிர வேறு யாராலும் நம்மை ஆறுதல்படுத்த முடியாது. இறைநம்பிக்கை தான் ஒவ்வொரு முறையும் துவண்டு போன மனிதனை அங்கிருந்து அழைத்து வருகிறது.

-விளம்பரம்-

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்பிக்கை இருந்தால் கையில் இருக்கும் கயிற்றை வைத்து பெரிய மலையை கூட அசைத்து விடலாம். நம்பிக்கையுடன் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பரிகாரத்தை செய்தாலே போதும் எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அடைத்து விடலாம். சில தாந்திரீக பரிகாரங்கள் நம்மை பிரச்சனைகளில் இருந்து மீட்டு கொண்டு வரும். அந்த மாதிரி பரிகாரம் தான் இந்த ஒரு ரூபாய் நாணயம் பரிகாரம். இதனை நம்பிக்கையுடன் செய்தால் கை மேல் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கடன்‌ தீர ஒரு ரூபாய் நாணய பரிகாரம்

இந்த பரிகாரத்தை எந்த நாளிலும் செய்யலாம். முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் 2 விரலி மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம், மற்றும் சிறிதளவு துளசி மூன்றையும் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். பின் இந்த முடிச்சை உங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தையும் கடவுளின் முன்வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் பூஜை அறையை சுத்தம் செய்யும் பொழுது மட்டும் இந்த முடிச்சை எடுத்து விட்டு, சுத்தம் செய்து முடித்த பின் அங்கேயே வைத்து விடுங்கள். உங்களது கடன் சுமை இறங்கும் வரை அந்த முடிச்சு பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு பெருமாளிடம் சென்று எனக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் வேண்டும் பொழுது உங்களுடைய கடன் படிப்படியாக குறைய அந்தப் பெருமாள் வழிவகுத்து தருவார். எப்பொழுது உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீறுகின்றதோ அப்பொழுது இந்த முடிச்சினை பெருமாள் கோயில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். முடிந்தளவு திருப்பதி கோயிலுக்கு சென்று இந்த முடிச்சினை செலுத்தினால் மிகவும் விசேஷமாக இருக்கும்.

தங்கம் சேர பரிகாரம்

பெரும்பாலான வீடுகளில் பண பற்றாக்குறை குறைந்து, பண வரவு அதிகரிக்க பல வகையான பரிகாரங்களை மேற்கொள்வார்கள். அதனுடன் சேர்ந்து இந்த ஒரு ரூபாய் பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் பணவரவு மட்டுமின்றி தங்கமும் சேரும். இந்த ஒரு ரூபாயை நமது பூஜை அறையில் வைத்தாலே குபேரரும், மகாலட்சுமி தாயாரும் செல்வ வளத்தை அள்ளித் தருவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நாணயம் என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் பல பேர் வீட்டில் வெற்றிலை மீது ஒரு ரூபாயை வைத்திருப்பார்கள். பூஜை அறையில் இந்த ஒரு ரூபாயை நாணயத்தை வைத்தாலே போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து நமது வீடே செல்வத்தில் செழிக்கும்.

-விளம்பரம்-

உப்பு மற்றும் ஒரு ரூபாய் நாணய பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் வீடுகளில் உப்பு வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று கூறப்படுகின்றது. அப்படி வாங்கி வந்த உப்பினை ஒரு தட்டில் சிறிதளவு எடுத்து, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கு தீபாராதனை காட்டி, வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் செலவாகமல் இருக்க! இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!

வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் ஒரு கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கைகளால் அள்ளி திரும்பவும் அந்த கிண்ணத்திலேயே போட்டு விடுங்கள். இது மாதிரி நாணயங்களின் ஒளியை எழுப்பி குபேரருக்கு பூஜை செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் என்றென்றும் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-