3 விரலி மஞ்சள் இருந்தாலே போதும் பணம் அதிகம் சேர்ந்துக் கொண்டே இருக்கும்!

- Advertisement -

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். தற்போதைய நாள்களில் ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கையை தீர்மானிப்பது பணமாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-

பலரும் தங்களது பணத்தை ஏதேனும் ஒரு முதலீட்டில் செலுத்தி அதனை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரும்பாடு தான் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அவசியமான பணத்தை நம்மிடம் ஈருக்கும் வழிமுறைகளை பற்றி ந இந்த பதிவில் தெரிந்து பார்க்கலாம். இந்த பரிகாரம் செய்தாலே போதும் வருமானம் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் தானாக தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும்.

- Advertisement -

பணம்‌ அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறை

செவ்வாய், வெள்ளி கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். இதனால் பண வரவும் தடை பெறும். அதனால் இந்த கிழமைகளில் வீட்டை துடைப்பதை தவிர்த்து விடுங்கள்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்கக்காமல் மற்ற நாட்களில் வீட்டை துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வீட்டை துடைக்க வேண்டும். இப்படி துடைப்பதன்‌ மூலம் தரித்திரம் நீங்கி, லட்சுமி கடாட்சம் பெருகி பண வரவு தாராளமாக இருக்கும்.

பணத் தடைகள் நீங்க

பெருமாள் மற்றும் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்தது அல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசி இலைகள் மற்றும் 11 கிராம்பு எடுத்து, சுத்தமான வெள்ளை நிற துணியில் கட்டி, பணத்தை சேமிக்கும் இடம் அல்லது அரிசி வைக்கும் இடத்தில் வைத்தால் மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கான வழி பிறக்கும். இந்த துளசி இலைகள் காய்ந்ததும் கால் படாத இடத்தில் போட்டு மீண்டும் இது மாதிரி செய்வதன் மூலம், நீண்ட காலமாக வராமல் இருந்த தொகை வந்து சேரும். மேலும், வருமானமும் கூடும்.

-விளம்பரம்-

வாராக் கடன்‌ வசூலாக

மஞ்சள் என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருள் என்பதால் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு மூன்று விரலி மஞ்சள்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு சிகப்பு துணியில் வைத்து அதனுடன்‌ கற்கண்டுகளை வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து நீங்கள்பணத்தை சேமிக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்குவதுடன் மஞ்சள் குரு பகவானுக்குரிய நிறம் இதனால் அங்கு பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும், நீண்ட காலமாக வராமல் இருந்த பணமும்‌ வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்குவதற்கு இந்த இந்த பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்!