Home ஆன்மிகம் கட்டுக்கட்டாக பணம், தங்கம் சேர அந்த காலத்தில் ராஜாக்கள் செய்த மிகவும் இரகசியான பரிகார முறை!!

கட்டுக்கட்டாக பணம், தங்கம் சேர அந்த காலத்தில் ராஜாக்கள் செய்த மிகவும் இரகசியான பரிகார முறை!!

பணம் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். இந்த பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் தான் இன்று பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உழைத்து பாடுபட்டால் மட்டும் பணம் நம்மிடம் பெருகி விடும் என்றால் அது சந்தேகம் தான். இன்றைய காலகட்டத்தில் அன்றாட தேவைக்கான பணத்திற்கே நாம் அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அந்த காலத்தில் வாழ்ந்த பண்ணையாரும் ஜமீந்தார்களும் பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி பரண்மேல் வைத்திருந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

இதற்கு காரணம் அவர்கள் பின்பற்றிய ஒரு ரகசியம்தான். பணம் பன்மடங்கு பெருக வேண்டும் என்றால், பண ஈர்ப்பு சக்தி நம்மிடம் இருக்க வேண்டும். அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கண்டிப்பாக நமக்கு வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று பண வரவை எப்படி அதிகரித்துக் கொள்வது என்று இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி ஜெயந்தி

லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம் மற்றும் லக்ஷ்மி ஜெயந்தி லட்சுமி தேவியின் பிறந்த நாள் என்று நம்பப்படுகிறது. சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலின் பெரும் சங்கடத்தின் போது லட்சுமி தேவி ‘பால்குண பூர்ணிமா’ அன்று பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அனைவரும் மகாலட்சுமி தாயாரை மனதார வணங்குவார்கள். லட்சுமி ஜெயந்தி மன்மத பூர்ணிமா என்றும் வசந்த பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமி தயார் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அப்படிப்பட்ட நாளில் நாம் ஒரு பரிகாரம் செய்து மகாலட்சுமி தாயாரை நமது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்

இந்த பரிகாரம் செய்வதற்கு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழம், 3 விரலி மஞ்சள், மல்லிகைப் பூ, கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில், 1 மூங்கில் குச்சி, 1 ரூபாய் நாணயம், ரூபாய் நோட்டுகள், தங்க காசு அல்லது ஏதேனும் ஒரு தங்கப்பொருள் மற்றும் ஒரு வெள்ளி நாணயம் முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் முறை

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு ரூபாய் நாணயம், ரூபாய் நோட்டுகள், தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் ஆகியவற்றை ஒன்றாக வைத்து விடுங்கள். அதன் மேல் நாம் எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சம் பழம், மூங்கில் குச்சி, விரலி மஞ்சள் ஆகியவற்றை வைத்து விடுங்கள். அதன் பிறகு இவை அனைத்தையும் மல்லிகை பூவினால் மூடி விடுங்கள். உள்ளிருக்கும் பொருள் வெளியே தெரியாத அளவிற்கு மூடிவிடுங்கள். பின் இதனை எடுத்து உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

ஒரு நாள் முழுவதும் இந்த பாத்திரம் உங்கள் பீரோவில் தான் இருக்க வேண்டும். பின்னர் அடுத்த நாளில் அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து அதில் இருக்கும் மல்லிகை பூவினை மட்டும் மாற்றி வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அதில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் பண தோஷம், நகை தோஷம் எல்லாம் நீங்கி நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். மல்லிகை பூவின் மனதிற்கு அந்த மகாலட்சுமி தாயாரே மயங்கி நமது வீட்டில் தங்கி விடுவார்.

பரிகாரம் செய்யும் நேரம்

இந்த பரிகாரத்தினை நாம் ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். பௌர்ணமி தினங்களில் செய்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் லட்சுமி ஜெயந்தி அன்று செய்தால் பலன் நமக்கு பன்மடங்கு பெருகும்.

இதனையும் படியுங்கள் : இந்த ஜென்மத்தில் பண கஷ்டமே உங்களுக்கு வராது இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்!

-விளம்பரம்-