மணிபர்சில் இந்த ஒரு வார்த்தையை மட்டும் எழுதி வைத்து பாருங்கள் உங்களுக்கு எப்பொழுதும் பணம் வந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இப்படி அனைவருக்கும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் பெரும்பாலானவர்கள் பதிலளிப்பார்கள். பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.

-விளம்பரம்-

வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.

- Advertisement -

மணிபர்சில் பணம் வற்றாமல் இருக்க

இப்போது மணிப்பர்ஸ் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவருமே எப்போதும் கையில் வைத்திருக்கக் கூடிய ஒரு பொருளாக மாறி விட்டது. அப்படி எப்போதும் நம்முடன் இருக்கும் பொருளில் இந்த ஸ்விட்ச் வேர்டை எழுதி வைக்கும் போது பண ஈர்ப்பானது நமக்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு தேவை வெள்ளை நிற பேப்பர், பச்சை நிற பேனா மட்டும் தான். இந்த வெள்ளை நிற தாளை கசங்கியோ, மடங்கியோ வைக்க கூடாது. அதே போல கோடு போட்ட தாளை பயன்படுத்த கூடாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு சுக்கிர ஓரையில் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் பௌர்ணமி நாளில் மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

Bring Full Count shreem Ease Now இந்த ஆங்கில வார்த்தையை எழுதி வைக்கும் அளவிற்கு பேப்பரை சிறிய துண்டாக அழகாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த வார்த்தையை எழுதி படிக்க தெரிந்தவர்கள் வாய் விட்டு படித்த பிறகு உங்கள் மணி பஸ்ஸில் வைத்து விடுங்கள். படிக்கத் தெரியாதவர்கள் அந்த வார்த்தையை யாரிடமாவது கொடுத்து எழுதி வாங்கி கொண்டு நீங்கள் பார்த்த பின்பு மணிபர்சில் வைத்துக் கொள்ளுங்கள். மணி பரிசில் வைக்கும் போது இந்த பேப்பரை மடித்து வைக்க கூடாது. அப்படியே வைக்க வேண்டும். அதே போல் பணமானது இந்த பேப்பரின் மீது படுவது போல் இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

இதை செய்த பிறகு தினமும் காலையில் எழுந்தவுடன் உங்கள் மணிபரிசில் இருந்து இந்த பேப்பரை எடுத்து படிக்க வேண்டும். தெரியாதவர்கள் பார்த்தால் கூட போதும். இதை பார்க்கும் போதும், படிக்கும் போதும் உங்களுக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற உந்துதலோடு செய்ய வேண்டும். அதே போல் இரவு உறங்க செல்லும் போதும் இந்த வார்த்தையை மறுபடியும் எடுத்துப் பார்த்து, படித்து அதன் பிறகு உங்கள் மணிபர்சில் வைத்து விடுங்கள்.

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/uppu-parigaram-in-tamil/

இந்த பேப்பரை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. கசங்கி அழுக்காகி விட்டால் மட்டும் பேப்பரை எடுத்து யாரும் கால் படாத வண்ணம் எரித்து போட்டு விடுங்கள். மறுபடியும் புதிதாக அதை நேரத்தை பார்த்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்விட்ச் வேர்ட் ஒரு ஏஞ்சல் எண் குறியீட்டை போல தான். நாம் சில வார்த்தைகளை பயன்படுத்தும் போது பிரபஞ்சத்திடம் இருந்து நமக்கான ஆற்றல் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

-விளம்பரம்-