இந்த மூன்று பொருட்கள் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் பணத்தை ஈர்த்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பொருள்களுக்கு இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி பலரும் கேள்வி
பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் சில பொருட்களில் தெய்வீக தன்மைகளும், தாந்திரீக பரிகார தன்மைகளும் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அதிலையும் சில பொருட்களில் நமக்கு வீட்டிற்கு செல்வதை கொண்டுவந்து நம் வீட்டின் பணப்புழக்கத்தை அபரீ விதமாக பெருக்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கும். அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இதை பற்றி தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வாசனை மிகுந்த பொருள்

பொதுவாக வீட்டில் இருக்கும் சில பொருட்கள் சில தெய்வத்துக்கு இஷ்டப்பட்ட பொருட்களாக அந்த கடவுளின் அம்சமாகவே இருக்கும். ஆனால் வாசனை மிகுந்த அத்தனை பொருட்களும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக சொல்லப்படுவது. அதிலும் நல்ல வாசனை, நேர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்றும். துர்வாசனை எங்கு நிறைந்து காணப்படுகிறது எதிர்மறை ஆற்றல் எங்கு நிறைந்துள்ளதோ அங்கு மூதேவி வந்து வாசம் செய்கிறாள் என்று கூறுவார்கள். அதாவது உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அழுக்கு படிந்த இடங்கள் அதிகமாக உள்ளது, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி கொண்டே இருக்கிறது, துர்வாசனைகள் அதிகமாக உள்ளது. என்றால் இது போன்ற இடங்களில் துரர் தேவிகள் வாசம் செய்வார்கள். உங்கள் வீட்டை தரித்திரம் பற்றிக் கொள்ளும்.

- Advertisement -

சோம்பு, ஏலக்காய், கிராம்பு

சரி வாருங்கள் பதிவிற்க்குள் போகலாம், அப்படி எந்தெந்த பொருட்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்த்து தரும் சக்தி கொண்டது தெரியுமா? சோம்பு, ஏலக்காய், கிராம்பு இந்த மூன்று பொருட்களும் மிகுந்த வாசனை மிக்க பொருட்கள். இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் போது. அது உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்த்து தரும் அதனுடன் தெய்வீக சக்தியிம், தாந்திரிக சக்தியும் நிறைந்து காணப்படும். அதனால் சிறிதளவு சோம்பு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு வெள்ளை துணியை விரித்து அதில் இந்த பொருட்களை போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இங்கு வையுங்கள்

இப்போது இந்த மூட்டையை நீங்கள் வீட்டில் எங்கெங்கெல்லாம் பணம் வைத்து எடுப்பீர்களோ அந்த இடங்களில் எல்லாம் இந்த பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இந்த பொருட்களில் இருந்து வெளிவரும் தெய்வீக வாசனை மற்றும் நேர்மறை ஆற்றல்கள் உங்கள் வீட்டிற்கு பணத்தை வசியம் செய்து எடுத்து வருவதுடன் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் துர்வாசனைகளை வெளியேற்றிவதிலும் சிறந்த பங்களிக்கிறது.

வருமானம் அதிகரிக்கும்

இப்படி இந்த தயார் செய்த முட்டையில் இந்த பொருட்களை மட்டும் போடாமல் பச்சை கற்பூரம், பட்டை போன்ற பொருட்களையும் நாம் போட்டு பயன்படுத்தலாம். இப்படி நாம் முடிந்து வைத்திருக்க மூட்டையை நம் பணம் வைக்கும் மணி பர்ஸ், தங்க நகைகள் வைக்கும் இடங்களில் வைக்கலாம். இதனால் உங்கள் பணம் வீண் செலவாகாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். சிறிது நாட்களில் உங்களுடைய வருமானமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here