நாம் பயன்படுத்தும் ஐஸ்வர்யங்கள் அனைத்தும் அதாவது பணம் தங்கம் வீடு நிலம் அனைத்து விதமான செல்வங்களும் மகாலட்சுமி தாய்க்கு சொந்தமானது. நாம் கடுமையாக உழைப்பதன் மூலமே இந்த செல்வங்களை எல்லாம் நாம் அடையலாம். இருந்தாலும் சில நபர்கள் வருடம் முழுவதும் நன்கு அயராது உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் பணமும் சேராது செல்வங்களும் சேராது அவர்கள் சம்பாதிக்கும் பணமும் அவர்களுடைய கைகளில் தங்காது. ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதையும் அதற்கான காரணத்தையும் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.
நாம் சம்பாதிக்கும் பணம் சொத்து சுகங்கள் நம்மிடம் நிலையாக இருப்பதற்கு மகாலட்சுமி அருள் தேவை. ஆனால் மகாலட்சுமியும் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார்கள் அதுபோலத்தான் இந்த பணமும், செல்வங்களும் ஓர் இடத்தில் நிலையாக இருக்காது இன்று உங்கள் கையில் இருக்கும் நாளை வேறொருவர் கையில் இருக்கும். இப்படி நிலையில்லாத இந்த சொத்த சுகங்களை நம்மிடையே தக்கவைத்துக் கொள்வதற்காக நமக்கு பிராப்தம் தேவைப்படும் இந்தப் பிராப்த்தை நமக்கு தரக்கூடியது மகாலட்சுமியின் அருள் மட்டும் தான்.
ஒருவர் மற்றொருவரிடம் பேசும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல விதமாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு தகாத வார்த்தைகளை அவர்கள் பேசும் பொழுது தாயே இழிவாக பேசும் பொழுது அவர்களிடம் இருக்கும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும் என்னதான் அளவுக்கு அதிகமாக சம்பாதித்தாலும் அதற்கு ஏற்ப அதிகமான செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கும் நண்பர்களுக்குள்ளேயே மறைமுகமான சில சூழ்ச்சிக்காரர்கள், எதிரிகள் இருப்பார்கள் அவர்களை நம் அழிவிற்கும் காரணமாகவும் இருப்பார்கள்.
அதனால் ஒருவர் மற்றொருவரை பார்த்து சனியம் பிடித்தவனை என்று பேசக்கூடாது. இது போன்று நீங்கள் பேசும்பொழுது சனி பகவான் உங்களை ஆட்கொள்வார் இதன் மூலம் சனி பகவானின் சாபத்திற்கும் நீங்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். அதைப் போன்று அடுத்தவர்களை மூதேவி என்றும் கூறக்கூடாது. ஏனென்றால் மூதேவி என்பது ஒரு பாவத்திற்கு கூரிய வார்த்தையாகும். மேலும் இது தரித்திரத்தை குறிக்கும். எனவே இது போன்ற வார்த்தைகளை நாம் பேசும் போது உபயோகப்படுத்த கூடாது.
அம்மாக்கள் அவர்களது குழந்தைகளை நீ எல்லாம் உருப்படவே மாட்ட என்று சபிக்க கூடாது. மேலும் ஐய்ஐய்யயோ என்ற வார்த்தையையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அய்யோ என்பது எமதர்மனின் மனைவியை குறிக்கும் சொல் இதை நாம் அடிக்கடி கூறும் பொழுது நமக்கு சாவு குறித்த பயம் தெரியும். மேலும் எதிர்காலத்தை நினைத்தும் நாம் பயப்பட ஆரம்பித்து விடுவார். ஆதனால் நீங்கள் பேசும் வார்த்தைகளை கவனமுடன் பேச வேண்டும். இதுபோன்று ஒழுங்கான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை பாதிக்காத வண்ணம் நல்லபடியாக பேசினால் உங்களுக்கு பிராப்தம் கிடைக்கும். அதன் மூலமாக நீங்கள் சம்பாதிக்க பணம் காசு சொத்து சுகங்கள் அனைத்தும் உங்களிடம் நிலையாகவே இருக்கும்