Home ஆன்மிகம் உங்கள் பிராத்தனையை கடவுள் ஏற்ற கொள்ள வேண்டுமா! இதை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

உங்கள் பிராத்தனையை கடவுள் ஏற்ற கொள்ள வேண்டுமா! இதை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

முதலில் நம் வீட்டில் உள்ள பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் ஏனென்றால் தூசுகள் , குப்பபைகள் நிறைந்துள்ள இடங்களில் ஒரு பொழுதும் தெய்வங்கள் தங்காது குறிப்பாக சொல்ல ணே்டுமானால் வீட்டில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் அவளுக்கு பதிலாக அங்கு துர் தேவதைகள் தங்க ஆரம்பித்து விடுவார்கள் பின் வீட்டில் லட்சுமி கடாட்சமாக இருக்காது வறுமை நிலவும், தொட்ட காரிங்கள் எல்லாம் தடங்களாகும் எனவே பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

-விளம்பரம்-

நாம் தெய்வத்திற்கு பூஜை செய்யும் போது பூஜை அறையில் கண்டிப்பாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இந்த ஐந்து பூதங்களும் இருக்க வேண்டும். தெய்வத்தின் கருனையால் நிலம், ஆகாயம், காற்று என இந்த மூன்று பூதங்களும் பூஜை அறையில் நிலையாக வாசம் செய்கிறது. ஆம் நிலத்தில் தான் நாம் பூஜை அறை அமைத்திருக்கிறோம், பூஜை பொருட்களை ஆகாய மார்க்கமாகத்தான் வைத்திருப்போம், காற்று பூஜை அறையில் நிறைந்திருக்கும் மேலும் பூஜை அறை திறந்த நிலையில் தான் இருக்க வேண்டும் எல்லா பக்கங்களும் அடைபட்டிருக்க கூடாது. அதன் பின் மீதம் இருக்கும் இரண்டு நீர் மற்றும் நெருப்பு பூதங்கள் இருப்பது அவசியமாகும்.

அதனால் நாம் விளக்கு ஏற்றுவதால் உண்டாகக்கூடிய நெருப்பு ஜோதியில் தான் இறைவன் தோன்றுவார் ஆதனால் நெருப்பு அவசியம், நாம் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நீர் வழியாகத்தான் தெய்வங்கள் ஆகாவனம் செய்யும் எனவே நீரும் அவசியமாகிறது. முதலில் நெருப்புக்கு விளக்கு ஏற்றாமல் பூஜை துவங்க படுவதில்லை, எனவே நெருப்பு வந்து விடுகிறது. ஆனால் நீர் என்பது கட்டாயம் நாம் வைக்க வேண்டியது அவசியமாகும்.

நீரில்லாமல் பூஜையை துவங்கக் கூடாது. ஆதனால் நீரை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தில் படைக்கக் கூடாது. அதற்கென கடைகளில் விற்கும் பஞ்சபாத்திரம் அல்லது கலசங்கள் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். எனவே பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜையை தொடக்கி, பின் பூஜையை நிறைவு செய்த பின்பு அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பருக கொடுங்கள் இந்த தண்ணீர் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்ததிற்கு சமம். இப்படி பஞ்சபூதங்களும் பூஜை அறையில் இருக்கு பட்சத்தில் உங்கள் வேண்டுதல் அனைத்து நிறைவேறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here