பாரம்பரை ஏழை கூட பணக்காரன மாற இந்த திலகத்தை தலையில் லேசாக தடவினால் மட்டும் போதும்!

- Advertisement -

வட மாநிலத்தில் இருந்து நமது ஊருக்கு வேலை தேடி வரும் பல பேர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதை நாம் காணலாம் ஆனால் நாம் எவ்வளவுதான் கடினப்பட்டு உழைத்தாலும் அதே நிலைமையில் தான் இருக்கிறோம். அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் நமக்கு இந்த கேள்வி எழும் அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வந்தார்கள் என்று?

-விளம்பரம்-

அதற்கு காரணம் அவர்கள் ஆன்மீகத்தில் வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர்கள் நம்பிக்கை இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் பெரியவர்களிடம் மரியாதை மற்றும் பணிவு தான் காரணம். நாமும் அதுபோல பரிகாரங்கள் மீது நம்பிக்கை வைத்து சில தாந்திரீக பரிகாரங்களை செய்யும் பொழுது வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றி இப்பதிவில் காணலாம்.

- Advertisement -

பணத்தை வசியம் செய்ய திலகம் தயார் செய்வது எப்படி

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவை முதலில் தாழம்பூ குங்குமம். ஏதாவது கோவிலில் வாங்கியதாக குங்குமம் இருக்க வேண்டும். அடுத்தது குங்குமப்பூ மற்றும் அனுமன் கோவில்களில் வழங்கும் செந்தூரம். இந்த பொருட்கள் மட்டும் தான் நமக்கு தேவை எனவே இந்த மூன்று பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இதனை கலக்குவதற்கு நெல்லி சாறு நமக்கு தேவை. அதனால் நெல்லிக்காயை துருவியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ அதன் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. பின் செந்தூரம் மற்றும் குங்குமம் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 சிட்டிகை குங்குமப்பூ மூன்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நெல்லி சாறு ஊற்றி கலந்து வெயிலில் காய வைத்து விடுங்கள். அவ்வளவுதான் நமக்கு தேவையான வசிய திலகம் தயார்.

இதை பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பணவசியம் ஏற்பட வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் மேலும் மேலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து இந்த குங்குமத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

உச்சத்தலையிலும் வைக்கலாம்

தினமும் குளித்துவிட்டு வந்தவுடன் இந்த குங்குமத்தை எடுத்து குலதெய்வத்தை வேண்டி நெற்றியில் இட்டுக் கொண்டாலும் சரி அல்லது கொஞ்சமாக எடுத்து உச்சந்தலையில் வைத்துக் கொண்டாலும் சரி உங்களுக்கு பண வசியம் ஏற்பட தொடங்கி விடும்.

ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த திலகத்தை இட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் நெற்றியில் இந்த குங்குமத்தை வைத்தால் பல நல்ல விஷயங்கள் அவர்களுக்கு வசியமாகும். வசியம் என்பது தவறான வார்த்தை அல்ல. நல்லதை நம் வசப்படுத்திக் கொள்ளக் கூடிய வார்த்தையை தான் வசியம் என்று சொல்கின்றோம். எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.