பெண்களின் முத்தில் தெய்வீக மற்றும் வசீகர தன்மை பெற! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

வெளிநாடுகளில் பெண்களை எப்படி பார்ப்பார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் நாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் நம் வீட்டில் இருக்கும் பெண்களை மகாலட்சுமி ஆகத்தான் பார்ப்பார்கள். அழகு என்பதையே நாம் ஒரு பெண்ணின் வடிவாக தான் நாம் உணர ஆரம்பித்தோம். ஒரு பெண்ணின் அழகை விட இந்த உலகத்தில் வேற எந்த ஒரு பொருளும் அழகாக இருக்க முடியாது. ஏன் ஆன்மீகத்திலேயே அழகு என்று சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஒரு பெண்ணின் முக அழகுதான் ஆனால் எங்கேயும் அவர்களின் நிறத்தை வைத்து இவர்கள் அழகானவர்கள் அவர்கள் அழகு இல்லாதவர்கள் என்று சொல்லப்படவில்லை. நாம் தான் அவ்வாறு சொல்கிறோம் அதனால் ஒரு பெண்ணின் முகத்தில் இருக்கும் தரித்திரம் நீங்கி தெய்வீக தன்மையுடன், முகப்பொலிவுடன் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண உள்ளோம்.

-விளம்பரம்-

நிறம் அழகு இல்லை

நான் மேலே சொன்னது போல் தான் அழகு என்பது நிறத்தினை கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை ஒரு சிலர் நிறமாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களின் முகத்தை பார்க்கும் போது அதில் ஒரு வசீகர தன்மை, ஒரு தெய்வீக தன்மை இருக்கும். ஆனால் ஒரு சிலர் பார்க்க நிறமாக இருந்தாலும் அவர்களிடம் அந்த வசீகரத் தோற்றமும் தெய்வீக தன்மையும் இருக்காது அழகு என்பது நிறத்தை கொண்டு பார்ப்பதில்லை அது ஒரு கலை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கலையிழந்த இருக்கும் உங்க முகத்தில் மீண்டும் தெய்வீக தன்மையை மற்றும் ஒரு வசீகரத்தை எப்படி கொண்டு வர வேண்டும் தெரியுமா.

- Advertisement -

பரிகாரம்

இதை ஒரு பரிகாரமாக கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இந்த பரிகாரத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆன்மிகத்தை பொறுத்தவரை அழகு என்று யாரைக் குறிப்பிட்டுள்ளார்கள் தெரியுமா ? ஆம் ஆன்மிகத்தின் முதல் முதலாக அழகு என்ற வார்த்தையை முருகப்பெருமானை வர்ணித்து தான் பயன்படுத்தினார்கள். ஏன் முருகப் பெருமானே தான் அழகன் என்று அழைக்கவும் செய்வார்கள். அதனால் இந்த பரிகாரத்தை நாம் முழுக்க முழுக்க முருகப்பெருமானை நினைத்து தான் செய்ய போகிறோம்.

தேவையான பொருட்கள்

பெண்களின் முகத்தில் உள்ள தரித்திரத்தை நீக்கி வசீகர தன்மையும், தெய்வீக தோற்றத்தையும் கொண்டுவர நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் சோம்பு, நன்னாரி, அதீமதுரம், காய்ந்த புதினா இலைகள் இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும். இந்த நான்கு பொருட்களையும் சம அளவில் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் வெயில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி வெளியில் காயவைத்த பொருட்களை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யுங்கள் இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் புதினாவை தவிர மூன்று பொருட்களும் பொடியாக கிடைக்கும் அந்த பொடியை வாங்கிக்கொண்டு புதினாவை மட்டும் காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

108 முறை உச்சரிக்க வேண்டும்

எப்படி இந்த நான்கு பொருட்களையும் பொடியாக அரைத்து பின் இந்த நான்கு பொடிகளையும் பூஜை அறையில் வைத்து பின் எப்பொழுதும் போல் பூஜை அறையை தயார் செய்து, கடவுள்களுக்கு பூ அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி முருகனை மனதார நினைத்து மனம் உருகி ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா என்ற மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள். நீங்கள் முருகனிடம் மனம் உருகி வேண்டும் பொழுது. உங்கள் முகத்தில் உள்ள தரித்திரம் விலகி முகப்பொலிவு பெற்று ஒரு தெய்வீக தன்மையும், வசீகரமும் தன்மையும் கொண்ட முகமாக மாற வேண்டுமென வேண்டிக் கொள்ளுங்கள். அப்படி வேண்டும் பொழுது உங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் பொடிக்கு அந்த தெய்வ ஆற்றல் கிடைத்து விடும்.

-விளம்பரம்-

48 நாட்கள் செய்ய வேண்டும்

அதன் பின்பு நீங்கள் வைத்திருக்கும் அந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டும் என்ற நேரத்தில் தேவையான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு பொடியையும் கலந்து நன்கு கொதிக்க விடுங்கள். பின் கொதித்த நீரை நன்றாக வடிகட்டி. அந்த புனித தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வடிகட்டிய தண்ணீரை நீங்கள் தினசரி குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கும் போது கலை இழந்து போன உங்கள் முகம் மறுபடியும் பொலிவுடன் ஒரு தெய்வீக தன்மையுடன் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக மாறிவிடும். இப்படி இதை 48 நாட்கள் தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் அவர்களின் முகம் ஒரு வசீகரத் தோற்றத்தில், லட்சிமி கடாட்சமாக காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here