Home ஆன்மிகம் சந்திரகிரகணத்துக்கு பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் ஆறு ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

சந்திரகிரகணத்துக்கு பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் ஆறு ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

2024 மார்ச் 25 அன்று சந்திர கிரகணம் நடைபெற்று முடிந்தது. இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு சில தோஷ கிரகங்கள் வலுப்பெற போகிறது எனவே இந்த தோஷ கிரகங்களான சூரியன் ராகு கேது போன்றவற்றால் ஆறு ராசிக்காரர்களுக்கு தனவிருத்தி யோகம் மற்றும் ராஜயோகம் கிடைக்கப் போகிறது. இந்த தீய கிரகங்களுடைய பலன்கள் மற்றும் தாக்கங்கள் ஒரு மாதத்திற்கு இருக்கும். தற்போது செவ்வாய் கும்ப ராசியிலும், சூரியன் மற்றும் ராகு மீன ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு ஒரு சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை பெறப் போகிறார்கள் அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை பற்றியும் என்னென்ன யோகங்களை பெறப்போகிறார்கள் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் குரு மற்றும் ராகு போன்றோர் தசா மற்றும் பலன்ஸ் தானங்களில் சஞ்சரிப்பதால் இவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் நடத்தை முற்றிலும் மாறப்போகிறது. இவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். மேலும் வேலை பார்க்கின்ற இடத்தில் பரவி உயர்வு தொழிலில் முன்னேற்றம் என அனைத்திலும் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து நிதி வரும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு தோஷ கிரகங்கள் பாக்கியம் மற்றும் பத்தாம் இடங்களில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புகளும் வெளிநாட்டு உறவுகளும் வெளிநாட்டு பணமும் கிடைக்கும். இதன் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். நம் முன்னோர்களின் மூலமாக நமக்கு பணம் எதிர்பாராத வகையில் வந்து சேரும். லாட்டரிகள் நிதி பரிவர்த்தனைகள் ஊடகங்கள் மூலமாக வருமானம் வரும். மொத்தத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும்

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு தோஷ கிரகங்கள் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் சர்ஜரிப்பதால் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் அமையும். வேலை பார்க்கும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் அதிகார யோகம் ஏற்படும். வாழ்க்கையில் பல நேர்மறையான விஷயங்கள் நடக்கும்
ஆரோக்கியம், நிதிநிலைமை,வியாபாரத்தில் லாபம் என அனைத்துமே மேம்படும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் கிரகமும் நான்காம் வீட்டில் தோஷ கிரகங்களான சூரியன் மற்றும் ராகு சஞ்சரிப்பதால் பெற்றோர்களின் மூலம் சொத்து கிடைக்கும். நிலம் விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து வருமானமும் அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட நல்ல சம்பளம் கிடைக்கும் பணத்தை பொருத்தவரையில் எந்த குறையும் இருக்காது.

-விளம்பரம்-

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு தோஷ கிரகங்கள் இரண்டு அல்லது மூன்றாம் இடங்களில் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்
ஏதேனும் சொத்து தகராறு கிடப்பில் கிடந்தால் அனைத்தும் முடிந்து அதன் மூலமும் வருமானம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக மட்டுமின்றி சமூகத்திலும் அந்தஸ்து கிடைத்த மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு கும்ப லக்னத்தில் செவ்வாய் மற்றும் கும்ப ராசியில் தோஷ கிரகங்களான சூரியன் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக திடீர் முன்னேற்றம் ஏற்படும்.காலடி எடுத்து வைக்கும் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். நிலுவையில் இருந்த சொத்து தகராறுகள் முடிந்து அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.தேவையற்ற‌ செலவுகள் நீங்கி வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.மேலும் அவர்களுடைய துணைவிக்கும் வேலை கிடைக்கும்