Home ஆன்மிகம் இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும் பணம் மடமடவென வீட்டில் சேர்ந்து...

இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும் பணம் மடமடவென வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும்!

பொதுவாக நாம் அதிகமான செடிகள் நட்டு வைத்தாள் இந்த நாட்டிற்கும் நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிக மிக நல்லது. அந்த வரிசையில் வீட்டிற்குள் காற்றோட்டம் இருக்க சில செடிகளை நாம் வைத்திருப்போம். காற்றோட்டத்திற்கு மட்டுமில்லாமல் வாஸ்து பிரகாரப்படி சில செடிகளையும் அழகிற்காக சில செடிகளையும் வைத்திருப்போம். வாஸ்து படி சில செடிகளை நம் வீட்டில் வைத்திருந்தால் நம் வீட்டில் மகிழ்ச்சியும் பண வரவும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. தெய்வத்தின் அருளும் செல்வமும் குறைவில்லாத வாழ்க்கையும் நமக்கு கிடைக்க வீட்டில் சில செடிகளை வைக்க வேண்டும். நாம் என்னதான் பண வரவு அதிகரிக்க வீட்டில் சில பூஜைகள் செய்து தெய்வத்தை வழிபட்டாலும் சில செடிகளை நம் வீட்டில் வளர்ப்பதால் அந்த செடிகள் பணவரவை ஈர்த்துக் கொடுக்கும். காந்தத்தைப் போலவே ஒரு சில செடிகளுக்கும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது. அந்தச் செடிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

காந்தம் போல பண ஈர்க்கும்

கிராஸ்ஸுலா என்ற செடியை பலர் அலுவலக மேஜையிலும் படிக்கும் டேபிளிலும் வைத்திருப்பார்கள் அப்படி இந்த செடியை வைப்பதன் மூலம் ஒரு நேர்மறையான எண்ணம் நமக்கு தோன்றும். பச்சை பசேல் என்று அந்தச் செடியை நாம் பார்க்கும் போதெல்லாம் நம் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும். இதை நாம் அலுவலக மேஜையில் பணிபுரியும் இடத்தில் வைத்திருந்தால் காந்தத்தை போல் பணத்தை ஈர்த்துக் கொடுக்கும். அலுவலகத்தில் இந்த வாஸ்து செடியை வைப்பதாக இருந்தால் தெற்கு பக்கம் நோக்கி வைக்கக் கூடாது தென்மேற்கு திசை நோக்கி தான் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் யாவும் அழிந்து நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.

நேர்மறையான எண்ணங்கள்

வீட்டின் பொருளாதார நிலையை மாற்ற இந்த செடியை வீட்டின் நுழைவு வாயிலில் வைக்கலாம். நம் வீட்டின் கதவுக்கு அருகிலும் இந்த செடியை வைத்தால் நம் வீட்டிற்கு அதிகமாக பண வரவு கிடைக்கும். இந்த செடியை வீட்டில் வெளியிலும் உட்புறமும் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். இந்தச் செடியை வீட்டில் வைக்கும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி தான் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் வீட்டிற்கு இந்த செடி பணவரவை அதிகரித்துக் கொடுக்கும். இந்த வாஸ்து செடிக்கு இயற்கையாகவே நிம்மதி பிரச்சினை இல்லாத வாழ்க்கை மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழி நேர்மறையான எண்ணங்களை கொடுக்கின்ற சக்தி என அனைத்துமே உள்ளது.

இந்தச் செடியை பராமரிப்பது மிகப்பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது. பெரியதாக இதற்கு பராமரிப்பு ஒன்றும் தேவைப்படாது. இந்தச் செடியை வீட்டில் சரியான திசை நோக்கி வைக்கும்பொழுது மங்களகரமானதாக இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழைத்து நேர்மறை ஆற்றலை மட்டுமே அனைவருக்கும் கொடுக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த வாஸ்து செடியை வாங்கி வையுங்கள்