இந்த 7 அதிர்ஷட செடிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் சேருமாம்!

- Advertisement -

அதிர்ஷ்டம் வர வேண்டும், பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இதற்காக நமக்கு தெரிந்து அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்து பார்ப்போம். வாஸ்து சாஸ்திரப்படியும், ஜோதிட சாஸ்திரப்படியும் வீட்டில் சில செடிகளை வைத்து வளர்ப்பதால் பண வரவும், அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் தேடி வரும். வீட்டில் பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்யும்.

-விளம்பரம்-

சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும். சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும். பணத்தை ஈர்க்கவும், வீட்டில் செல்வத்தையும் பணத்தையும் தக்கவைக்கவும் சில சூட்சும ரகசியங்கள் உள்ளன. நம் வீட்டில் வைக்கும் செடிகள் பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவை. அது‌ என்ன‌ செடிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ஜேட் செடி

ஜேட்‌செடி வீட்டில் வீ வைப்பதன் மூலம் பணத்தடைகள் நீங்கும். இந்த செடியை வளர்க்க முடியாதவர்கள் இந்த செடியினால் செய்யப்பட்ட ஜேட்கல்லை வாங்கி வைத்துக் கொண்டாலே போதும். இதனால் பண பாக்கிகள் வசூல் ஆகும். இது வீட்டிற்குள் வைத்து வளர்க்கக் கூடிய ஒரு வகையான செடியாகும். சீன வாஸ்து சாஸ்திரப்படி இலைகளின் முனைகள் கூர்மையாக இல்லாமல், வட்ட வடிவில் இருக்கும் இலைகள் அனைத்திற்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய சக்தி உண்டு என சொல்லப்படுகிறது. இதனால் தான் வங்கிகள், தொழிலகங்கள் போன்ற இடங்களில் இதனை வளர்க்கிறார்கள்.

மணி பிளாண்ட்

மணி பிளாண்டை தென்கிழக்கு திசை நோக்கி வளர்ப்பது சிறப்பானதாகும். மணி பிளான்ட்டை வீட்டில் வைத்து வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். அதுமட்டுமல்லாமல் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் செடியாகவும் மணி பிளான்ட் கருதப்படுகிறது.

துளசி

துளசி தெய்வீக தன்மை. உடையது இது மகாலட்சுமி தாயாரின் அம்சமாக கருதப்படுகிறது. துளசி செடிக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி மட்டுமல்லாமல், காற்றை சுத்தப்படுத்தக்கூடிய சக்தியும் உள்ளது. இதனால் தான் பலரும் அவர்கள் வீட்டில் துளசி வளர்க்கிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்நேக் பிளான்ட்

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இந்த ஸ்நேக் பிளான்டுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. அதோடு காற்றில் உள்ள நச்சுக்களை ஈர்த்து, காற்றை தூய்மையானதாக மாற்றும் தன்மை இந்த ஸ்நேக் பிளான்டிற்கு உண்டு. பொதுவாக கேதுவின் ஆதிக்கம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி தான் இருப்பார்கள். இது மாதிரியான பிரச்சனைகள் தீர வீட்டில் இந்த செடி வைத்து வளர்க்கலாம்.

மூங்கில் செடி

பெரும்பாலும் இந்த செடியை அனைத்து இடங்களிலும் நம்மளால் இப்பொழுது காண முடியும். இந்த செடி அழகுக்காக வைக்கப்பட்டாலும் இதற்கு பண ஆகர்ஷன தன்மை உண்டு. அதாவது இதற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. இந்த செடி அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதுடன், எதிர்மறை ஆற்றலை நீக்கி, மன அமைதியை தரக் கூடிய தன்மை இந்த மூங்கில் செடிக்கு உண்டு. மூங்கில் செடிக்கு பதிலாக மூங்கில் குச்சிகளை கூட அழகுபடுத்தி வைக்கலாம். இதுவும் அதிர்ஷ்டத்தை தரக் கூடியதாகும். இந்தச் செடியினை ஒன்றாக வைக்க கூடாது. இதனை வைத்தால் மூன்று, ஐந்து என்று தான் வைக்க வேண்டும்.

ரப்பர் பிளாண்ட்

ரப்பர் பிளான்டிற்கு பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய சக்தி உண்டு. செல்வ வளத்தையும் உயர்த்தும் தன்மை இதற்கு உண்டு. இதை வெற்றியை தரக் கூடிய செடி என்றும் சொல்வதுண்டு. தென்கிழக்கு திசையில் மட்டுமே இந்த செடியை வைத்து வளர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் நீங்கள் இருக்கும் இடத்தில் இந்த ரப்பர் பிளாண்டை வையுங்கள்.

-விளம்பரம்-

ஆர்சிட் செடிகள்

ஆர்சிட் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த செடியில் வளரும்‌ பூக்களுக்கு பணத்தை ஈர்க்க கூடிய தன்மை உள்ளது. இதில் பூக்கக் கூடிய பூக்கள் 40 நாட்கள் வரை கூட வாடாமல் இருக்கும் தன்மை கொண்டவை. செடியில் இருந்த உதிரும் இந்த பூக்களை பை, பர்ஸ் ஆகியவற்றில் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும். இந்த செடியை வீட்டில் வளர்த்து வந்தால் இது நமது வாழ்வில் பல நன்மைகளை ஏற்படுத்தும்.