தமிழரின் பொங்கல் பண்டிகையை புராண கதைகளில் எப்படி சொல்கிறார்கள் தெரியுமா ?

pongal
- Advertisement -

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை இந்துக்களின் புராணக் கதைகளில் எவ்வாறு குறிப்பிட்ட உள்ளார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ?வாருங்கள் பொங்கல் பண்டிகையை இந்துக்களின் புராணக் கதைகளை எவ்வாறு கூறியுள்ளார்கள். எப்படி கூறியுள்ளார்கள் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம்.

-விளம்பரம்-

முதல் கதை

- Advertisement -

இது அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் சிவபெருமானை தொடர்பு படுத்தி வரும் புராண கதையாகும். இந்த கதைப்படி சிவபெருமான் பூலோகத்தில் வாழும் மனிதர்களிடம் போய் தினமும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்து குளித்து மாதம் ஒருமுறை மட்டும் உணவு சாப்பிட வேண்டும் என்ற செய்தியை தனது தீவிர பக்தனும் தனது வாகனமும்மான ஆன நந்தி பகவனிடம் சொல்லி அனுப்பினாராம். ஆனால் நந்தி பகவான் அதை தவறுதலாக புரிந்து கொண்டு பூமியில் வாழும் மனிதர்களிடம் போய் தினமும் உணவு உண்டு மாதம் ஒரு முறை மட்டும் உடம்பிற்கு எண்ணெயன தேய்த்து குளிக்க வேண்டும் என கூறிவிட்டார். இவ்வாறு நந்தி செய்ததை பார்த்து கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை இனி வாழ்க்கை முழுவதும் பூமியிலே இருக்கும் படியாக கூறி. தினமும் மனிதர்களுக்கு உணவு உண்ண வேண்டும் என்றால் விவசாயம் செய்வதற்கு உதவியாக மாடாக மாறி இங்கேயே இருக்க வேண்டுமென்று சாபம் அளித்தார். அதன்படி தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையில் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மாட்டிற்காக என்று நாம் ஒரு தினம் கொண்டாடி வருகிற மாட்டு பொங்கலை தொடர்பு படுத்துகிறது.

இரண்டாவது கதை

இந்த கதையில் பூமியில் மகாபாரத போரை நடத்துவதற்காக கிருஷ்ண அவதாரம் எடுத்து விஷ்ணு பகவான் கோகுலத்தில் வளர்ந்து வரும் சமயத்தில் தன் கடமைகளை சரிவர செய்யாமல் நான் தான் தேர்களுக்கெல்லாம் தேவன் என்று இந்திர தேவன் ஆணவத்தில் ஆடிக் கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த கிஷ்ணர் இந்திர தேவனை யாரும் பூஜிக்க கூடாது என அவரின் ஆணவத்தை அடக்குவதற்காக கிருஷ்ணர் உத்தரவிட்டார். அதன்படி இந்திரனை பூஜை செய்யாத மக்களை கஷ்டத்தில் ஆழ்த்துவதற்காக இந்திர பகவான் வருனை பகவானை அனுப்பி கோகுலம் முழுவதையும் வெள்ளத்தில் மூழ்கடிக்க சொன்னார். ஆனால் கிருஷ்ண பகவான் தன் சுண்டு விரலால் கோவர்த்தன மழையை தூக்கி மக்களின் பாதுகாப்பு அரணாக நின்று காத்தார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் தென்னிந்தியாவில் பல இடங்களில் மழை பெய்த அந்த மூன்று நாட்கள் கழித்து தொடர் பண்டிகை ஆக கொண்டாடப்பட்டு வருவது தமிழர்களின் பொங்கல் பண்டிகையை தொடர்பு படுத்தி கூறும் ஒரு புராண கதை ஆகும்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here