வீட்டில் நல்ல சக்தி இருந்து கொண்டே இருக்க இதை செய்யுங்கள் வீட்டிலும் செல்வம் தங்கும்!

- Advertisement -

நம் வீட்டில் உள்ள செல்வங்கள் நிலையாக வீட்டில் தங்குவதற்கு நம் வீடு முழுக்க நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும் அதாவது வீட்டில் நல்ல சக்தி எப்பொழுதும் சூழ்ந்து இருக்க வேண்டும். அதன்படி வாஸ்து சாஸ்திரங்கள் நாம் செய்யும் போது நல்ல சக்தியை நம் வீட்டிற்கு கொண்டு வரலாம். உதாரணமாக நாம் வீட்டின் முன்பு வீட்டின் உரிமையாளர் பெயர் பலகை வைக்கும் பொழுது அடுத்தவர்களுக்கு இது இவருடைய வீடு என்ற உணர்வு வரும் பொழுது அது நேர்மறை ஆற்றலாக மாறும் இதனால் நம் வீட்டில் நல்ல சக்தி சூழ்ந்து கொள்ளும் இது போன்று. இன்னும் நம் வீடு முழுக்க நல்ல சக்திகள் சூழ்ந்து இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை தினங்களில் பிரம்ம முகூர்த்த நேரங்களில் ஒரு அகலமான அகல்விளக்கில் உப்பு நிரப்பி அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் மஞ்சள் நிறப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் திரி போட்டு எண்ணெய் உற்றி பூஜை செய்து வந்தால் நாம் வீட்டில் இருக்கும் எப்பேர்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும் விலகி நம் வீட்டில் நல்ல சக்தி சூழ்ந்து கொள்ளும்

- Advertisement -

சனிக்கிழமை அன்று கங்கை நீர் இருக்கும் கலசத்தை வைத்து பூஜை செய்து வந்தால். நம் வீட்டில் உள்ள கெட்ட சக்தி அனைத்தும் விலகி நம் வீட்டிற்கு நல்ல வளத்தை அது தரும்.

தினமும் காலை மாலை என வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் வீட்டிலும் நல்ல சக்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் மேலும் பூஜை அறையில் ஓம் ஸ்வஸ்திக் போன்ற சின்னங்களை வைத்து பூஜை செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று எலுமிச்சம் பழம் ஒன்றை பூஜை செய்து பின் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு வைத்தால் நமக்கும் நாம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் மேல் இருக்கும் கண் திருஷ்டி விலகிவிடும் இதனால் நல்ல சக்தி அந்த இடத்தில் வாசம் செய்யும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here