இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும்.
நன்கு காரசாரமான மசாலாவில் ஊறி இருக்கும் இறாலை சுவைப்பதெ ஒரு தனி ருசி தான். இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது. மிளகு ரசம் சாதமும் மற்றும் இறால் தொக்கும் ஒரு அசத்தலான காம்பினேஷன். இதற்கு நிகர் இது தான்.
இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் தொக்கு இறாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு தனியாக மசாலா அரைக்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுலபமான முறையில் சுவையான இறால் தொக்கு செய்யலாம். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதை எவ்வேறு தயார் செய்வது என்பது பற்றிப் பார்போம்.
இறால் தொக்கு | Prawn Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ இறால்
- 4 மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள்
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்
- 2 வெங்காயம்
- 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 3 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தாளிப்பதற்குதேவையான அளவு
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தடவி வைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில்எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்,பின் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- இறாலை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும், தண்ணி கொஞ்சம் சுண்டியதும்மறுபடியும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி இறாலை வேக வைத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் முற்றிலுமாக சுண்டி இறால் நன்கு தொக்கு பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- சுவையான இறால் தொக்கு தயார். சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.