உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!

- Advertisement -

முன்பெல்லாம் நமக்கு யார் எதிரிகள் யார் நமக்கு தீய வேலைகளை செய்வார்கள் என நம்மால் கணித்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள முடியும். ஆனால் தற்போதைய நாட்களில் நம்முடன் இருப்பவர்களிலேயே யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என கணிக்க முடியாத சூழலில் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். நம் கூடவே இருப்பார்கள் ஆனால் நமக்கு தெரியாமல் நம் பின்னாடி ஏகப்பட்ட வேலைகளை செய்வார்கள். அது நாம் தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, நாம் வேலையை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி, ஏன் நமது சொந்த பந்தங்களும் உள்ளாகவே இப்பொதல்லாம் இது நடக்கின்றது. இப்படி நமக்கு தீங்கு செய்வதற்கு தீய எண்ணங்களுடன் நம்மை நெருங்குவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்துக்கும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணப் போகிறோம்.

-விளம்பரம்-

பரிகாரம் செய்ய தேவையானவை

முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்காக நமக்கு வெள்ளை எருக்கன் செடியின் இலை, பஞ்சு திரி, நல்லெண்ணெய், ஒரு அகல் விளக்கு இந்த பொருட்கள் மற்றும் தேவைப்படும் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்வதற்கு முன்பாக அதற்கான திரியை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் வெள்ளை எருக்கன் செடியின் இயையை கசக்கி அந்தச் சாறை நாம் வைத்திருக்கும் கிண்ணத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அந்த தண்ணீரில் நாம் வைத்திருக்கும் பஞ்சி திரியை நன்றாக நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது இதுபோன்று ஒன்பது முறை இந்த திரியை அந்த கிண்ணத்தில் உள்ள தண்ணீருடன் முக்கி எடுத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாள் அதனால் ஞாயிற்றுக்கிழமை உங்கள் பூஜை அறையை தவிர்த்து வேறு எந்த இடங்களிலும் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் வைத்திருக்கும் விளக்கை கிழக்கு நோக்கி இருக்கும்படி வைத்து அதன் முன் அமர்ந்து கொண்டு நல்லெண்ணெய் ஊற்றி திரியை போட்டு பின் உங்களுக்கு யாரால் துன்பங்கள் வருமோ அவர்களின் பெயர்களை சொல்லி இந்த துன்பங்களில் இருந்து என்னை காத்து அருளுங்கள் பின்பு உங்களுக்கு பேர் தெரியாத நபர்களாக இருந்தால் எனக்கு வரவேற்கின்ற துன்பத்திலிருந்து என்னை காத்து அருளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு விநாயகருக்கு மா இலை மாலை போட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

பயன்படுத்து கூடாது

இது போன்ற இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு விளக்கில் மீதி இருக்கும் எண்ணெயையும், திரியையும் மனிதனின் கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அடுத்த முறை விளக்கேற்றும் போது புது திரி, புது எண்ணெய் ஊற்றி வழிபடுங்கள். ஒருவர் இயற்றிய விளக்கை மற்றொருவர் ஏற்றவும் கூடாது. இந்த விளக்கை மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தவும் கூடாது என்பதில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் துன்பங்கள் பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற இந்த பரிகாரத்தை செய்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கண் திருஷ்டி

இப்படி நீங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு தெரிந்த எதிரிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் என அனைவரின் தீய எண்ணங்களில் இருந்து உங்களை காப்பாற்றும். ஏன் அவர்கள் உங்களுக்கு தீய வேலைகளை செய்ய நினைக்கும் போது அந்த எண்ணங்களை உடைத்து எடுக்கும் சக்தி இந்த விளக்கிற்கு உண்டு. அது மட்டும் இல்லாமல் உங்கள் மேல் விழும் கண் திருஷ்டியில் இருந்தும் உங்களை இந்த விளக்கு காப்பாற்றும். ஆதனால் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனையே கொடுக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here