காடை வெரைட்டிஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது சைடிஷ் தான். காடை சைடிஷ்க்கு அப்படின்னு சொல்லி தனியா ஒரு பேன் பேஸ் இருக்கு. அப்படி எந்த ஒரு சாப்பாடோடையும் காடை சைடிஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும்.அப்படி இந்த காடை ரோஸ்ட் எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய காடை சைடிஸ்கள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் காடை இருந்தாலும் மசாலாக்கள் இருந்தாலும் இந்த காடை ரோஸ்ட் ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
சுவையான இந்த காடை ரோஸ்ட் நீங்க செய்து கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த காடை மேல நல்ல வெண்ணெய் தடவி ரோஸ்ட் பண்ணும்போது எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே காடை ரொம்பவே பிடிச்சமான ஒரு உணவா மாறிடும்.
அதுலயும் நீங்க இந்த மாதிரி நல்ல மொறுமொறுப்பா ஒரு ரோஸ்ட் பண்ணி கொடுக்கும் போது ரொம்பவே சுவையா இருக்கும் நல்லா ருசிச்சு சாப்பிடுவாங்க. அடிக்கடி காடை ரோஸ்ட் பண்ணி கொடுக்க சொல்லியும் உங்களை கேட்டுட்டு இருப்பாங்க. சுவையான இந்த காடை ரோஸ்ட் எப்படி சமைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
காடை ரோஸ்ட் | Quail Roast Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ காடை
- 10 சின்ன வெங்காயம்
- 2 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- 4 பச்சைமிளகாய்
- 1 கைப்பிடி புதினா
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 1/2 எலுமிச்சை பழம்
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 ஸ்பூன் மல்லிதூள்
- 2 ஸ்பூன் தயிர்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் காடையை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கிகொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை நன்றாக மொறுமொறுவென்று பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் சோம்பு, மிளகு பொரித்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அதில் எலுமிச்சை பழசாறு மசாலாவிற்கு தேவையான அளவுஉப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள மசாலாவில் மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
- பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள காடையை ஒருபாத்திரத்தில் வைத்து அதில் தயிர் காடைக்கு தேவையான அளவு உப்பு அரைத்த மசாலாவைசேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் அல்லதுஎண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள காடையை மிதமான தீயில் வைத்து ரோஸ்ட் செய்ய ஆரம்பிக்கவும்.
- ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் நன்றாக திருப்பி போட்டு காடை வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறினால்சுவையான காடை ரோஸ்ட் தயார்.