நாம் நம்மை அலங்கரித்து கொள்வதற்காக சில உலோகங்களை அணிகலன்களாக நாம் பயன்படுத்துவோம். ஆனால் நாம் அந்த உலோகங்களை நம்மை அலங்கரித்துக் கொள்ளும் அணிகலன்களாக மட்டும் தான் பயன்படுத்துகிறோமா என்று கேட்டால். உண்மையில் அது இல்லை நாம் சில உலோகங்களை நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அணிகலன்களாக அணியும் போது அந்த உலோகங்கள் நம் உடம்பில் ஏற்ப்படும் ஒரு சில தாக்கத்தின் காரணமாக நமது உடம்பிற்கு சிலர் நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக பெண்கள் தங்கள் கால்களில் வெள்ளியால் ஆன கொலுசை அணிவதன் மூலம் பெண்களின் உடம்பில் இருக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதுபோன்று நம் உடம்பில் சில இடங்களில் உலோகங்களை அணியக்கூடாது அப்படி நாம் அணியும் போது அது நமக்கு தீமையை மட்டும் செய்யும். அது போல தான் நாம் கையில் கட்டை விரலில் மோதிரம் அணியும் போது நமக்கு சில ஆபத்தை ஏற்ப்படுத்தும்.
அப்படி நீங்கள் கட்டை விரலில் மோதிரம் போடுவதன் காரணமாக உங்களால் கையாள முடியாத அளவிலான கெட்ட சக்திகளை அது ஈர்க்கும் அது உங்களையே செயல்பட முடியாத அளவிற்கு உங்கள் உடம்பை உலுக்கி முடக்கிவிடும்.
குறிப்பாக எப்படி நீங்கள் அணியக்கூடாத கட்டை விரலில் மோதிரம் அணிவதன் மூலம் நீங்கள் ஒரு சில குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது சில குறிப்பிட்ட விதமான கெட்ட சக்திகளை நீங்களே அழைப்பதற்காக கட்டை விரலில் மோதிரம் போடுவதாக அர்த்தம். இது சில சக்திகளை ஈர்ப்பது உங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால் இனி மோதிர விரலில் மட்டுமே மோதிரம் அணியுங்கள்.